வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நெல்லையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

நெல்லையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது.


இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் படுகாயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால், பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை பள்ளி சுவர் இடிந்து விழுந்த உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், காயமுற்ற நான்கு மாணவர்களுக்கு தலா 3 லட்சமும் முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பள்ளி கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமைதலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment