குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஷிபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த கன்னியாகுமரி புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 153A, 505/1 b, 504 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!
No comments:
Post a Comment