சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ராஜலட்சுமி(40) என்பவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தன்னுடைய 16 வயது மகளுடன் தனியே வசித்து வந்தார். அப்போது பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(46) என்ற வேளாண்மை துறை அதிகாரியுடன் ராஜலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடிக்கடி ராஜலட்சுமியின் வீட்டுக்கு போன அதிகாரிக்கு அவரின் 16 வயது மகள் மீதும் ஆசை வந்துள்ளது. இதை அறிந்த தாய் அவரின் ஆசைக்கு உடந்தையாக இருந்துள்ளார் .இதனால் மனம் வருந்திய சிறுமி, முள்ளுவாடி கேட் அருகே உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அந்த அதிகாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment