தமிழ்நாட்டில் 2030-2031 ஆம் ஆண்டுக்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பை 23.8% இலிருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன் 'பசுமைத் தமிழ்நாடு' இயக்கத்தைத் தொடங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலின்போதே, தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை உயர்த்துவது பற்றித் தொலைநோக்கு ஆவணத்தில் அறிவித்திருந்தேன். அரசாணை வழியே அதற்குக் கால்கோள் இடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன், நம் மண்ணுக்குரிய மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நடும் பசுமைத்தமிழகம் இயக்கம் உயிர்கொள்கிறது!" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment