வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Kanniyakumari District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Kanniyakumari District News. Show all posts
Showing posts with label Kanniyakumari District News. Show all posts

Tuesday, January 18, 2022

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..! கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்.!

கன்னியாகுமரி மாவட்டம் கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின், தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதனால், கடந்த சில நாட்களாக பென்சி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 11, 2022

சாலையை தோண்டிப் பார்ப்போமா? காண்ட்ராக்டரை நேரில் ரெய்டு விட்ட அமைச்சர்..!

சாலையை தோண்டி பார்ப்போமா? மோசமாக இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரித்த அமைச்சர்.


கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் மனோ தங்கராஜ். இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இயங்கி வருகிறார். கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை இவரது பத்மநாபபுரம் தொகுதி வழியே பயணிக்கிறது.

இந்த சாலை பணிகள் மிக மோசமாக நடந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து அமைச்சருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அந்த சாலையில் பயணித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு பணியை கண்காணித்துக் கொண்டிருந்த காண்ட்ராக்டரை நேரில் சந்தித்தார். அப்போது பணியில் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் புகார்கள் குறித்து நேரில் கேட்டார்.

அப்போது சாலையை தோண்டி பார்ப்போமா? மோசமாக இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும்’ என நேரடியாக கான்ட்ராக்டரிடம் எச்சரிக்கை செய்தார் அமைச்சர். இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு காண்ட்ராக்டர், ‘தரமான பணி நடைபெறும்’ என உறுதி கொடுத்ததை தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.   

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் 


முந்தைய கன்னியாகுமரி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 08, 2022

வேறு பெண்ணுடன் தொடர்பு.!! முதல்வரிடம் அழுதுகொண்டே முறையிட்ட பெண்..!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா (37).


இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், பாபு கடந்த ஒரு வருடமாக வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் லலிதாவின் வீட்டிற்கு வந்த பாபு குடும்பம் நடத்தி வரும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை வீட்டை அடித்து நொறுக்கி தாக்கி வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதாக தெரிகிறது.

இதில், படுகாயமடைந்த லலிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குளச்சல் மகளிர் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததோடு தினம்தோறும் காவல் நிலையத்தில் காத்திருந்தும் நடவடிக்கை இல்லாததால் லலிதா, தனது இரு மகள்களுடன் கதறி அழுது முதலமைச்சர் ஐயா நடவடிக்கை எடுங்க எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

/*Sex*/

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 19, 2021

அபூர்வ வகை உடும்பை பிடித்த வனத்துறையினர்..!

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் நேற்று (டிசம்பர் 18ம் தேதி) அபூர்வ உடுப்பு ஒன்று பிடிபட்டது. அதை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பாக பூதப்பாண்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அபூர்வ வகை விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஊர்ந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கன்னியாகுமரி போலீசார் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 


தகவலின் அடிப்படையில் வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர் பிரவீன் சம்பவ இடத்துக்கு வந்து சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டின் மதிற்ச்சுவர் மேலும் இது சென்ற விலங்கை பிடித்தார். அப்போதுதான் தெரிந்தது அது அபூர்வ வகை உடும்பு என தெரியவந்தது. அந்த அபூர்வ வகை உடும்பானது சுமார் 4 கிலோ இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த அபூர்வ வகை வனவிலங்கான உடும்பினை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் நாகர்கோவில் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்று பூதப்பாண்டியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்பட்டது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்