டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் இல்லத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கிளம்பியது. தொடர்ந்து 4 மணி அளவில் அவரது உடல் புதுடெல்லியில் உள்ள தௌலக்கான் பகுதியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் உடலுக்கு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment