கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுமா என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ரேஷன் கடைகள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்கள் தடைவிதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.
இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி மட்டுமே. அரசு அதுப்போன்ற எந்த உத்தரவும் விதிக்கவில்லை என்றார்.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment