வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்ததில் காயம் | A student traveling on the steps of a bus was injured in a fall Near Madurantakam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்ததில் காயம் | A student traveling on the steps of a bus was injured in a fall Near Madurantakam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒழுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் மதுராந்தகம் இந்து மேல்நிலை ஆண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான்.


இன்று வழக்கம்போல் பள்ளிக்கு அரசு பேருந்தில் வரும்போது பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கி வந்துள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வந்துகொண்டிருந்தபோது அய்யனார் கோயில் என்ற பகுதியில் மாணவன் கை நழுவி சாலையில் விழுந்துள்ளார்.

எனினும் மாணவன் அதிர்ஷ்டமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவனை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். 

பள்ளி நேரங்களில் கூட்ட நெரிசலால் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி செல்கின்றனர். எனவே,  காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்து இயக்க பொதுமக்கள் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment