வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவி நடத்தையில் சந்தேகம்; கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கொடூர கணவன் கைது.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 11, 2022

மனைவி நடத்தையில் சந்தேகம்; கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கொடூர கணவன் கைது.!

நெல்லையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. 


இவர் லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுடலையாண்டி லாரி ஓட்டுநராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூர் சென்று வருவது வழக்கம் இந்நிலையில் ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்து சுடலையாண்டி சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஜெயலட்சுமியை அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜெய லட்சுமி சம்பவ இடத்தில மயங்கினார். மேலும் ஆத்திரம் தீராமல் தேங்காய் துருவியை எடுத்து ஜெயலட்சுமி மண்டையில் பலமாக சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் சுடலையாண்டி தப்பி ஓடினார். பின்னர் பழவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பழவூர் போலீசார் சுடலையாண்டியை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய் சிங் மீனா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜெயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருநெல்வேலி மாவட்ட செய்திகள் 


முந்தைய திருநெல்வேலி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment