வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Salem District News Latest
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Salem District News Latest. Show all posts
Showing posts with label Salem District News Latest. Show all posts

Sunday, April 24, 2022

கணவரை காணவில்லை.. சினிமா பாணியில் களமிறங்கிய மனைவி.. அப்படி என்ன செய்தார்..?

சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார். 


சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார்.சேலம்‌ மாவட்டம்‌, வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிவராமன். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிவராமன் கடந்த 7 ஆம் தேதி வீட்டிலிருந்து வேலை நிமித்தமாக வாழப்பாடி செல்வதாக கூறிக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரது நண்பர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் இல்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின்‌ பேரில்‌ வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன சிவராமனைஇ தீவிரமாக தேடி வருகின்றனர்‌. ஆனால் கணவர் காணமால் போகி 19 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன கணவரை தேட மனைவி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதாவது ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒலிபெருக்கி மூலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று தனது கணவன் குறித்து கேட்டறிந்து , தேடி வருகிறார். குறிப்பாக முத்தம்பட்டி, நீர்முள்ளிகுட்டை, சிங்கிபுரம்‌, அயோத்தியாபட்டணம்,‌ வலசையூர்,‌ குள்ளம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேடும்‌ பணியில்‌ ஈடுபட்டு  வருகிறார். 

மேலும் ஆட்டோவில் தனது கணவர் புகைப்படம் இருக்கும் போஸ்டர் ஒட்டி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது கணவரை தேடி வருகிறார்‌.கணவரை தேடி மனைவியும், அப்பாவை தேடி மகனும் மகளும் நாள் கணக்கில் இவ்வாறு கிராம கிராம சென்று வருகின்றனர். கணவனைக்‌ காணவில்லை என்று புகார்‌ கொடுப்பதோடு நிறுத்திவிடாமல்‌ ஆட்டோவில்‌ வீதி வீதியாக சென்று தானும் களத்தில் இறங்கி தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளை மக்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சேலம் மாவட்ட செய்திகள் 


சேலம் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 26, 2021

கள்ளக்காதல் மோகத்தால் கட்டிய கணவரை அடித்து கொன்று தண்ணீர் டிரம்முக்க்குள் அடைத்த மனைவி.!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேதுபதி, பிரியா தம்பதி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் இருந்து அதிளவில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், பிரியாவின் வீட்டில் தண்ணீர் ஊற்றி வைப்பதற்காக இருந்த பிளாஸ்டிக் பேரலில் இருந்து துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை திறந்து பார்த்தபோது, அதில், சேதுபதியின் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பிரியா முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், "கூலி வேலை செய்து வரும் சேதுபதி வேலைநிமித்தமாக வெளியூர் சென்று வருவார். மேலும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்ததுள்ளார். இந்த நிலையில், பிரியாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களது கள்ளத்தொடர்புக்கு சேதுபதி இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட திட்டமிட்டிருந்தது" தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சேலம் மாவட்ட செய்திகள் 


முந்தைய சேலம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

சேலத்தில் ஏரியில் மூழ்கி 4ஆம் வகுப்பு மாணவி சாவு..!

சேலம் பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. இவர்களின் மகள் தீபிகா (வயது 10). இவள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.


வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததால் நேற்று காலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்றாள். மகள் வெளியில் சென்று வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளப்பட்டி ஏரிக்கரைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது மாணவி தீபிகா அணிந்திருந்த காலணி கரையோரத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது தூரத்தில் ஏரியின் ஆழமான பகுதியில் மாணவி தீபிகாவின் உடல் மிதந்ததை கண்டு கதறி அழுதனர். இதையடுத்து ஏரியில் மூழ்கி மாணவி பலியான தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியில் வசிக்கும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரி பகுதியில் கூடினர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஏரியில் மூழ்கி மாணவி பலியானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: -

மாணவி தீபிகா இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரி பகுதிக்கு சென்றபோது தவறி ஆழமான பகுதியில் விழுந்து உள்ளார். சிறுமி விழுந்த இடத்தில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் கலந்து தேங்கி உள்ளது. இதனால் சாக்கடை கழிவு நீரில் மூழ்கி மூச்சுத்திணறி சிறுமி இறந்தாளா? என்று விசாரித்து வருகிறோம்.

மேலும் அந்த மாணவி சிறுமி என்பதால் அவரை யாரேனும் நீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ஏரியில் சிறுமி பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சேலம் மாவட்ட செய்திகள் 


முந்தைய சேலம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 20, 2021

பெற்ற மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.!! மனைவி குமுறல்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி பகுதியில் வசிப்பவர் கண்ணன் (45). இவரது மனைவி ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் சொந்த மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 


இதை பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். தனது கணவர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆத்தூர் மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணன் தனது மகளை பாலியல் கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

ஹார்மோன் ஊசி செலுத்த மறுத்த திருநங்கை அடித்துக் கொலை!! தாய் உள்ளிட்ட 6 பேர் கைது!!

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார். நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்ஷிதா என மாற்றிக் கொண்டார். பெங்களூர் சென்று திருநங்கைகளுடன் வாழ்ந்த அவர், கடந்த தீபாவளி பண்டிகையன்று வீடு திரும்பியுள்ளார். இதனிடையே கடந்த வாரம் சக்தி என்ற இளைஞருடன் ஏற்காடு சென்று விட்டு , நள்ளிரவு ஒன்றரை மணியளவில் வீடு திரும்பியுள்ளார். 


மறுநாள் காயத்துடன் , அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் நவீன்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத் துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .


 

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அதில், தாய் உமாதேவி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால், தாய் உமாதேவி தனக்குத் தெரிந்த நபர்கள் 5 பேரின் உதவியுடன் அவரை அடித்துக் கொன்றது விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து திருநங்கை மர்மச்சாவை கொலை வழக்காக மாற்றி , தாய் உமாதேவி , ஜாகீர்அம்மாபாளையம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ், காமராஜ், பாரதிநகரை சேர்ந்த கார்த்திகேயன், சந்தோஷ், டால்மியாபோர்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நவீன்குமார் திருநங்கையாக மாறியது , தாய் உமாதேவிக்கு பிடிக்கவில்லை. மற்ற திருநங்கைகளுடன் வந்து தனது வீட்டில் குடியேறிவிடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் தெரிந்த நபர்களிடம் தனது மகன் ஆணாகவே இருக்க என்ன செய்யலாம் என கேட்டுள்ளார். அதற்கு சிலர் திருநங்கையாக மாறும் நபர்கள் ஆணாகவே இருக்க விழுப்புரத்தில் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள் . அங்கு சென்று நவீன்குமாருக்கு ஹார்மோன் ஊசி போட்டால், எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளனர். அந்த தகவலை மகன் நவீன்குமாரிடம் தெரிவித்து ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்ள தாய் உமாதேவி அழைத்துள்ளார். ஆனால் , நான் திருநங்கையாகவே வாழ விரும்புகிறேன். 

என்னை எங்கும் அழைக்காதீர்கள் என கண்டிப்பாக கூறியுள்ளார். இதனால், தெரிந்த நபர்கள் மூலம் மகனின் கால்களை அடித்து ஒடித்துவிட்டு , அதற்கு சிகிச்சை அளிப்பது போல் விழுப்புரம் அழைத்துச் சென்று ஹார்மோன் ஊசி போட்டுவிடலாம் என தாய் திட்டமிட்டுள்ளார்.

அதன்படியே தெரிந்த நபர்களான வெங்கடேஷ் , காமராஜ் , கார்த்தி உள்ளிட்ட 5 பேரைக் கொண்டு நவீன்குமாரை அடித்து, அவரது காலை உடைக்க முற்பட்டுள்ளனர். அப்போது , வாயை பொத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்னர் இறந்துவிட்டதாக கருதி , காட்டுப்பகுதியில் தூக்கிப் போட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். திருநங்கைகளுக்கு இன்று வரை நம் சமுதாயத்தில் பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படவில்லை. ஹார்மோன் ஊசி போட மறுத்ததால் திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்