வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நவம்பா் 16 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – கேரளா அரசு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

நவம்பா் 16 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – கேரளா அரசு



சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை தொடா்ந்து நவம்பா் 16ம் தேதி முதல் ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று கேரளா அரசு தொிவித்துள்ளது.




சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடு இருக்கக் கூடாது என்று தனது தீா்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதை மிகவும் சேதமடைந்துள்ளது. மேலும் பெண்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் செய்து முடிக்கப்பட்ட பின்னா் நவம்பா் 16ம் தேதி முதல் ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று கேரளா அரசு தொிவித்துள்ளது.


Popular Posts

No comments:

Post a Comment