வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மட்டன் சமைக்க தாமதம் - 4 வயது மகளை அடித்துக் கொன்ற கொடூரத் தந்தை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 17, 2018

மட்டன் சமைக்க தாமதம் - 4 வயது மகளை அடித்துக் கொன்ற கொடூரத் தந்தை!



மட்டன் சமைத்து தர தாமதம் செய்ததால் மனைவி மீது கோபம் கொண்ட கணவர், நான்கு வயது மகளைக் கொலை செய்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பீகாரின் பகிர்டோலி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சாம்பு லால் சர்மா (40). குஜராத்தில் வேலை பார்த்து வந்த சாம்பு, திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த புதனன்று, மட்டன் சமைக்கும்படி தன் மனைவியிடம் கூறியிருந்தார் சாம்பு.


ஆனால், உணவைச் சமைக்க தாமதமானது. இதனால் மனைவி மீது சாம்புவிற்கு கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தில் தனது நான்கு வயது மகளை அவர் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். ஆனால், சாம்புவை சுற்றி வளைத்த மக்கள், போலீசிடம் அவரை ஒப்படைத்தனர். தற்போது சாம்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment