வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மெரினாவில் குதிரை சவாரி.. சிறுமியை கடத்திய சிறுவன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 22, 2018

மெரினாவில் குதிரை சவாரி.. சிறுமியை கடத்திய சிறுவன்..



மெரினாவில் தோழியுடன் குதிரை சவாரி செய்ய சென்ற சிறுமியை கடத்தி சென்ற சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை முகப்பேர் மேற்கு கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெயிண்டரான இவருக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பக்கத்தில் வசிக்கும் தோழியுடன் 13 வயது சிறுமி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

சவாரி  
அப்போது வீட்டுக்கு வந்த அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். ஆடையும் கிழிந்த நிலையில் இருந்ததை பார்த்து சிறுமியின் தாயார் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி கூறுகையில் மெரினாவில் இருக்கும் போது குதிரை ஓட்டும் அண்ணன் ஒருவர் குதிரையில் உட்காரவைத்து சவாரி செய்தார்.


அழுத சிறுமி 
அதன்பின்னர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்று 2 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்து மீண்டும் மெரினா கடற்கரையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று கூறி அழுதுள்ளார்.

பலாத்காரம்  
இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அப்போது மெரினாவில் குதிரை சவாரி நடத்துவோரில் சிலர் சிறுமிகள் இருவர் பெற்றோர் துணையில்லாமல் தனியாக வந்துள்ளதை தங்களுக்கு சாதகமாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


விசாரணை  
சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கை திருமங்கலம் போலீஸார் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இதையடுத்து விசாரணையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் மைனர் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனிடம் போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment