வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 27, 2019

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!

இன்னும் 20 நாட்களில் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட போகிறது என்று இயற்கை ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

 அந்த ஆபத்து நம்மை நெருங்கி கொண்டு இருக்கிறது.. தமிழகத்தில் அதிக மக்கள் வசிக்கும்.. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சென்னை தற்போது பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

 சென்னையில் இந்த வருடம் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் ஏற்பட போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் தண்ணீர் பஞ்சம் என்றால் 2003-2006 வரை நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சத்தை விட, தாது பஞ்சத்தை விட மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவ போகிறது என்று கூறுகிறார்கள்.


சென்னை எப்படி
சென்னையில் ஒருநாள் குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். இது ஏரிகளில் இருந்து தற்போது கொண்டு வரப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் இந்த தண்ணீர் விநியோகம் நடக்கிறது. ஆனால் ஆனால் 50 கோடி லிட்டர்தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.


ஏற்கனவே நிலவி வருகிறது
இத்தனை வருடங்களாக சென்னை இந்த 35 கோடி லிட்டர் தண்ணீர் இல்லாமல் பஞ்சத்தில்தான் இருந்துள்ளது. ஆனால் அது சமாளிக்க கூடிய தட்டுப்பாடுதான். இதனால் சென்னையில் கடந்த 8 வருடங்களில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை. ஆனால் இனி நிலைமை அப்படி இருக்காது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.


ஏன் அப்படி 
 தமிழகத்தில் இந்த வருடம் மிக மோசமான அளவிற்கு மழை பெய்துள்ளது. மே மாதத்திற்கு முன் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. மே மாதத்தில் பெய்ய வேண்டிய கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுக்க 60% மழை குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 69% மழை குறைந்துள்ளது. ஃபனி புயலும் பெய்ய வேண்டிய மழையை ஏமாற்றி எடுத்து சென்றது.


இதுதான் காரணம் இதுதான் தற்போது சென்னையின் தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமாகி உள்ளது. சென்னை பொதுவாக பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம், சோழவரம், புழல் ஏரிகளைத்தான் குடிநீருக்கு நம்பி இருக்கிறது. ஆனால் தற்போது மழை பற்றாக்குறை காரணமாக இந்த ஏரிகள் எல்லாம் காலியாகி வருகிறது. விரைவில் எல்லா எரியும் காலியாகி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 செம்பரம்பாக்கம்
 முக்கியமாக செம்பரம்பாக்கம் ஏரிகளில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அங்கு இருக்கும் தண்ணீரும் இன்னும் இரண்டு வாரத்தில் மொத்தமாக காலியாகிவிடும் என்று கூறுகிறார்கள். அப்படி செம்பரம்பாக்கம் ஏரி காலியானால், அவ்வளவுதான், இன்னும் 20 நாட்களில் சென்னையில் மிக மிக கடுமையாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட போகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் காலியானால், பெரும்பாலான தண்ணீர் லாரி நிறுவனங்கள் தண்ணீர் வழங்குவதை மொத்தமாக நிறுத்தும். கேன் வாட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். பின் பெரிய அளவில் விலை உயரும். கடைசியில் மொத்தமாக நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள். 

நிலத்தடி நீர் நிலத்தடி நீர் 
 அதே சமயம் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூட நாம் நினைக்க முடியாது. சென்னையில் இதே அளவு தண்ணீர் பஞ்சம் நிலவினால் இன்னும் இரண்டு வருடங்களில் நிலத்தடி நீர் மொத்தமாக காலியாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள். இதனால் இப்போதே தண்ணீர் பஞ்சத்திற்கு உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் வந்தாரை வாழவைக்கும் சென்னையை வாழ வைக்க முடியாது நிலை ஏற்படும்



நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?




http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/2.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!


http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

 
http://www.runworldmedia.com/2019/05/12-24.html


No comments:

Post a Comment