வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு... உஷார் நிலையில் கேரளா!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 28, 2019

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு... உஷார் நிலையில் கேரளா!

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக கேரளாவிற்குள் ஊடுருவும் வாய்ப்பு இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 இலங்கையில், கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 256 பேர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.


இந்த நிலையில், இலங்கையில் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.


மேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதில், கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையை தொடர்ந்து கேரளாவிலும் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

 இதனிடையே, சில நாட்களுக்கு முன் இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படகு மூலமாக லட்சத்தீவை நோக்கி வருவதாக மத்திய புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த படகில் இருக்கும் தீவிரவாதிகள் கேரளாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.


இதையடுத்து, கேரள கடற்கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பஹேரா ஆய்வு நடத்தியுள்ளார்.

 கேரளாவின் கடலோர மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை கண்காணிப்பளர்கள் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் தீவிரப்படுத்துமாறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடலோர காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


சந்தேகத்திற்கிடமான படகுகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மீனவர்களும், பொதுமக்களும் சந்தேகத்திற்கிடமான படகுகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?


http://www.runworldmedia.com/2019/05/2.html

http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!


நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_20.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!


http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

 
http://www.runworldmedia.com/2019/05/12-24.html


No comments:

Post a Comment