வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 08, 2019

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்! கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞரை பெண் குரலிலேயே பேசி வரவழைத்த அவரது கணவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியும் ஆபாச என.எம்.எஸ் அனுப்பியும் வந்துள்ளார்.



அந்த பெண் பலமுறை எச்சரித்தும் மர்ம நபர் கண்டுகொள்ளாததால் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்ட சுப்ரமணியம் பெண் குரலில் பேசி தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபருக்கு அழைப்பு விடுத்தார்.


இதனை உண்மை என நம்பிய அந்த நபரும் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் சுப்ரமணியம் மற்றும் சிலர் இருப்பதை கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம நபரை விரட்டி பிடித்த சுப்ரமணியம் மற்றும் பொதுமக்கள் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபரின் பெயர் ராம் பிரபு (35 ) என்பதும், இவர் மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்

கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் போட்டோ ஸ்டூடியோ ஓனரை கொன்று எரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கை உடனான கள்ளக்காதலை விட மறுத்த காரணத்தால் அந்த நபரை கொன்றதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


 செவ்வாய்கிழமையன்று நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் உள்ள கரியமாணிக்கபுரத்தில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

 நாகர்கோவில் உதவி எஸ்பி கோட்டார் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அந்த சுடுகாட்டிற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட நபருக்கு 30 வயதிருக்கலாம் வேறு எங்கேயோ கொன்று சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்துள்ளனர். அந்த சடலம் யாருடையது, கொலைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய 2 தனிப்படை அமைக்கப்பட்டது.


காரை வைத்து கண்டுபிடித்த போலீஸ்
கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாயமானவர்களை ஒரு தனிப்படை போலீசார் தேடிய நிலையில், மற்றொரு பிரிவு போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் சம்பவம் நடந்த நேரத்தில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து போன மர்மகாரை கண்டுபிடித்து விசாரணையை தொடங்கினர்.


போட்டோ ஸ்டூடியோ ஓனர் 
அந்த கார் வள்ளியூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் ரெசி என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள நண்பர்களைப் பார்க்கப் போன ரெசியை இரண்டு தினங்களாக காணவில்லை என்றும் கூறினர். இதனையடுத்து ரெசியின் நண்பர்கள் பக்கம் போலீசின் பார்வை திரும்பியது.

கொன்று எரித்த நண்பன் 
 ரெசியின் நண்பர் பெயர் கேத்தீஸ்வரன் என்று தெரியவந்தது. அவர் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் என்றும் விசாரணையில் தெரியவரவே, போலீசார், கேத்தீஸ்வரனை அள்ளி வந்தனர். அவர்களுக்கு அதிகம் வேலை வைக்காத அவர், ரெசியை கொன்றது தான்தான் என்று அடிக்காமலேயே ஒப்புக்கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கொலைக்கான காரணத்தையும் கூறினார்.

கள்ளக்காதலை விடாத நண்பன
 ரெசியும் இலங்கை தமிழர் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரெசி பின்னர் வள்ளியூரில் ஸ்டூடியோ தொடங்கினார். அவ்வப்போது கேத்தீஸ்வரன் வீட்டிற்கும் வந்து செல்வராம். இதில்தான் கேத்தீஸ்வரன் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. ரெசி தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.


கொன்று எரித்தோம் 
 எனது தங்கையுடன் கள்ளக்காதலை தொடர்ந்தார் ரெசி, எனக்கு தெரியாமல் பல இடங்களில் சந்தித்தனர். ஊரில் பேச்சு வரவே அசிங்கப்பட்டேன். இருவரையும் எச்சரித்தும் விடாமல் தொடர்ந்தனர். இதனால் ரெசியை கொல்ல முடிவு செய்தேன். ரம்ஜான் அன்று நாகர்கோவில் வரவழைத்து மது குடித்தோம். தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் காரிலேயே வைத்து கத்தியால் குத்தினேன். சடலத்தை எரிக்க முடிவு செய்தேன்.


கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் டாக்டர்  ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.





அந்த பெண் மருத்துவர் இந்த நபருடன் போராடியதோடு நாக்கையும் கடித்து துப்பியுள்ளார்.



அவர் கடித்த வேகத்தில் அந்த நபரின் நாக்கு துண்டாகிவிட்டது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

 அப்போது அந்த பெண் மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பி ஓட முயன்ற அந்த நபரை கைது செய்தனர்.

 மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியாமல் வாடகையை உயர்த்தும் ஹவுஸ் ஓனர்கள்!

நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் மக்களிடம் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.



 சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான மோட்டார் பம்புகளிலும் கைப்பம்புகளிலும் தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

 தனியார் தண்ணீர் லாரிகள்தான் தற்போது சென்னை மக்களின் ஆபத்பாண்டவனாக உள்ளது. அன்றாட தேவைக்கே தண்ணீர் இன்றி அல்லாடும் மக்கள் தனியார் தண்ணீர் லாரிகளில் ஒரு டேங்கர் இவ்வளவு என மொத்தமாக பேசி சம்புகளில் இறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.


குடியிருப்பு வாசிகளிடம் கட்டணம் 
 பல குடியிருப்புகளில் இப்படி பெறப்படும் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இத்தனை குடம்தான் என கணக்கோடு வழங்கப்படுகிறது. டேங்கர்களில் பெறப்படும் தண்ணீருக்கான கட்டணம் குடியிருப்பு வாசிகளிடம் ஷேர் செய்து வசூலிக்கப்படுகிறது.

அத்தியாவசிய தேவைக்கும்
 வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் குடி தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்துவது வாடிக்கைதான். ஆனால் தற்போது குளிப்பது உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் காசுக்கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.

புறநகர் பகுதிகளில்

இதனால் தவிப்புக்கு ஆளான மக்கள் இது சரிப்பட்டு வராது என முடிவு செய்து நகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை ஷிப்ஃட் செய்கின்றனர். வழக்கமாக புறநகர் பகுதிகளில் வீட்டு வாடகை குறைவாகவே இருக்கும்.

புறநகரில் வாடகை உயர்வு 
 நகர் பகுதிகளில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகையை விட புறநகர் பகுதியில் டபுள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை குறைவாகதான் இருக்கும். ஆனால் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் புறநகர் பகுதிகளிலும் வாடகை வீட்டிற்கான கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


துண்டு விழும் பட்ஜெட் 
 பட்ஜெட் போட்டு செலவு செய்யும் சென்னை மக்கள் தண்ணீர் பிரச்சனையால் அனைத்து செலவுகளும் கணிசமாக அதிகரித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் பட்ஜெட்டில் மாதம்தோறும் துண்டு விழுந்து பெரும் நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.







காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், குடிநீரைக் கொண்டு தனது லக்சூரி காரை கழுவியதாக இந்திய அணியின் புகழ்வாய்ந்த கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.




இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வரும்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது லக்சூரி காரை குடி தண்ணீரைப் பயன்படுத்தி கழுவியுள்ளார். 

அவர் வேறுயாருமில்லை, நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு அதிகாரிகள் அபராதம் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.


அதிலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குடிநீர் பிரச்னை, பூதகரமாக வெடித்துள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களுமே தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தண்ணீர் பிரச்னை தற்போது இந்தியா முழுவதும் தலைவிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டுள்ளது.

இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதேசமயம், நீர் நிலைகளை சரிவர தூர்வாறாமல், பாதுகாக்காமல் விட்டதும் இதற்கு முக்கியமாக காரணமாக இருக்கின்றன.

 இதனாலயே, பல நீர்நிலைகள் தற்போது, காய்ந்து குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர்.


சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளையும், தண்ணீர் லாரிகளையும் தங்களின் அன்றாட தேவைக்கான நீருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிர்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ குடிநீர் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டிருந்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதிலும், அவரிடத்தில் ஆடி நிறுவனத்தின் கார்களே அதிகமாக இருக்கின்றன.


இரவோடு இரவாக, போஸ்ட் ஆபீஸ், பிஎஸ்என்எல் ஆபீசில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தபால் அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துக்கள், கருப்பு மை பூசிய அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒரு பரிந்துரையை சமர்ப்பித்திருந்தது.




தமிழகத்தை பொறுத்த அளவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கல்வி திட்டம் அமலில் உள்ளது. ஆனால், மொழி பாடத்திட்டம் என்பது மூன்றாவது மொழியாக, ஹிந்தியையும் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற பரிந்துரையை கொண்டதாகும்.


இது ஒரு வகையில் ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக ஹிந்தி மட்டுமே இன்றி, வேறு பிராந்திய மொழிகளையும் விருப்ப மொழிப் பாடமாக அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது.

 இருப்பினும், மும்மொழி பாடத்திட்டம் என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்க கூடியது என்பதும், பிராந்திய மொழிகளை விட ஹிந்தியை தான் அதிகம் பேர் படிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும் என்ற நடைமுறை விஷயமும் இந்த பரிந்துரைக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

 இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, தபால் அலுவலகத்தின் வெளியே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில், ஹிந்தி மொழி வாசகத்தை மட்டும் யாரோ நள்ளிரவில் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். 

 இதேபோன்று, அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தின் வெளியே இருந்த ஹிந்தி எழுத்துக்களும் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மை பூசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுபோன்று கருப்பு மை பூசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.


வாங்குன கடன திருப்பித் தரலைங்க, அதான் அவன் பொண்ண கொன்னுட்டேன்! அரண்டு போன அலிகார்..!

பீஃப் சாப்பிட்டாலோ அல்லது பீஃப் என்கிற பெயரை உச்சரித்தால் கூட "போட்றா அவன" என ஹிந்துத்வ தீவிரவாதிகள் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், பீஃப் சாப்பிட்டார்கள் என்பதற்காக இறந்த முகம்மது அக்லஃப் இறந்த அதே மாநிலத்தில் தற்போது இன்னொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.


 பூட்டுகளுக்கு பெயர் போன அலிகார் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, தப்பல் (Tappal) கிராமத்தில் அந்தக் கொடூரம் கோரமாக நடந்திருக்கிறது. வாங்கிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என, கடன் வாங்கியவரின் 2.5 வயது குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள் கடன் கொடுத்த காட்டு மிராண்டிகள்.

என்ன பிரச்னை 
 ஒரு அழகிய குடும்பம். அந்த குடும்பத்துக்கு மேலும் அழகு சேர்க்க ஒரு குட்டி இளவரசியாக ஒரு 2.5 வயது பெண் குழந்தை. மிக அளவான சம்பாத்தியம், சின்ன வேலை, செல்லக் குழந்தை என சிறிய உலகத்தில் வாழும் குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு அவசர தேவைக்காக பக்கத்து வீட்டுக் காரர்களான சஹித் மற்றும் அஸ்லாமிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

அப்புறம் தருகிறேன் 
 சரி ஏதோ அவசரத்தில் கேட்கிறார்கள் என்பதால் சஹித்தும் அஸ்லமும் எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள் எனக் கேட்காமலேயே கடனைக் கொடுத்துவிட்டார்கள். 

 சில வாரங்கள் கழிந்து விட்டது. "என்னய்யா வாங்குன 10,000 ரூபாய் கடன எப்பய்யா தருவே" என சஹித்தும் அஸ்லாமும் வேறு தொனியில் கேட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய குடும்பமும் விரைவில் கொடுத்து விடுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


கொடுக்கவில்லை
இன்னும் சில வாரங்கள் கழிந்துவிட்டது. இந்த முறை இன்னும் கோபத்துடனும், மரியாதை குறைவாகவும், “ஏய்யா கடன் வாங்குறப்ப நல்லா இருந்துச்சுல்ல, இப்ப கடன எப்ப குடுப்ப” என மிரட்டல் தொனிலேயே கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் போகட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என நம் அப்பாவிக் குடும்பம் வழக்கம் போல பதில் சொல்லி இருக்கிறது.

அடிதடி
ஒரு நாள் மீண்டும் சஹித்தும் அஸ்லமும் வெளிப்படையாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லை உன் குழந்தையை தூக்கட்டுமா எனவும் மிரட்டி இருக்கிறார்கள். பயந்து போன அந்த ஏழைக் குடும்பம், காலில் விழாத குறையாக அடித்துப் பிடித்து சஹித்துக்கும், அஸ்லாமுக்கும் பல விதங்களில் சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

கோபம் 
 ஆனால் சஹித்துக்கும் அஸ்லாமுக்கும் கோபம் தாளவில்லை. ஏற்கனவே அந்த அப்பாவிக் குடும்பத்தில் மிரட்டியது போலவே, மே 31, 2019 அன்று குழந்தையைக் கடத்தி இருக்கிறார்கள். கடத்திய குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றே விட்டார்கள்.

 கோபம் அடங்காமல் கண்களையும் நோண்டி எடுத்திருப்பதாகச் சில செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் பின் தான் அவர்கள் செய்தது கொலை என்கிற பெரிய தவறு அவர்களுக்குப் புரிய வருகிறது.

அடையாளம் தெரியக் கூடாது 
 ஆக தவறை மறைக்க அந்த 2.5 வயது பிஞ்சுக் குழந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு கண்டம் துண்டமாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்கள்.

 குழந்தையின் உடல் அங்கங்களை தெரு நாய்கள் வாயில் கவ்விக் கொண்டு எடுத்துச் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகப்பட்டு குப்பைத் தொட்டியைத் தோண்டித் துருவி இருக்கிறார்கள். குழந்தையின் சடலம் கடந்த ஜூன் 02, 2019 அன்று தான் கிடைக்கிறது.

காவல் துறை 
 விசாரணையில் கடன் பிரச்னை தெரிய வர சஹித் மற்றும் அஸ்லாமை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்படி விசாரணைகளை நடத்தி வருவதாக அலிகார் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறதாம்.

உண்ணாவிரதம் 
 தன் 2.5 வயது மகளின் மரணச் செய்தி கேட்ட தகப்பன் “சஹீத் மற்றும் அஸ்லாமின் மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த இருவரால் மட்டும் என் குழந்தையைக் கொன்று இருக்க முடியாது.

 அப்படி கைது செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” எனச் சொல்லிகாவல் துறைக்கு பகீர் கிளப்பி இருக்கிறார்.

நடவடிக்கை
மேற்படி எந்த பிரச்னையும் நடக்காமல் இருக்க, 2.5 வயது மகளைப் பறி கொடுத்த குடும்பத்தினருக்கும், தப்பல் கிராமம் சுற்றிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 இதை ஒரு முன்னேற்பாடாக காவல் துறையினர் செய்திருப்பதாகவும் அலிகார் மாவட்டத்தின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் சொய்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்களில் இருந்து சொல்கிறார்கள்.

இந்து - முஸ்லிம் 
 செய்திகள் ஒரு பக்கம் இப்படி வந்து கொண்டிருக்க, இறந்த 2.5 வயது செல்ல மகளின் பெயர் ட்விங்கில் ஷர்மா என்றும், அந்தச் சிறுமியை முகம்மது சஹித் பாலியல் வன் கொடுமைக்கு ஆள் ஆக்கி கொலை செய்துவிட்டான் என்றும் பல ட்விட்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது வரை இறந்த 2.5 வயது மகளின் பெயர், அவர்களின் பெற்றோர் விவரங்களை அலிகார் காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி


ஏர்வாடி அருகே உள்ள ஏராந்துறையைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சக்தி (வயது 45). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.




 இதையடுத்து அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்றார்.



டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர். வீட்டுக்கு வந்த அவர் மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றார்.


 மாத்திரையில் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும்.


 மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திமுக வயிறு வளர்க்க இந்தி.அரசியல் செய்ய இந்தி எதிர்பா.?? வெளுத்து வாங்கும் H.ராஜா..!!சிக்கி சின்னா பின்னமான திமுக பேச்சாளர்..!

ஒரு தனியார் தொலைகட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் பங்குபெற்ற இவர் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கேட்ட கேள்ளவிகளுக்கு பதில் கூற முடியாமல் சிக்கி கொண்டார். அந்த விவாதத்தில் நடந்தவை.

நெறியாளர்: உங்கள் கட்சி தலைவர்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படிக்கும் வாய்பு இருப்பது போல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படித்தால் என்ன தவறு.

திமுக பேச்சாளர்:CBSC பள்ளி மாநில அரசு கட்டுபாட்டில் இல்லை இது மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது ஆகையால் CBSC பள்ளியில் இந்தியை கொண்டு வந்தது மத்திய அரசு தான்.
நெறியாளர்: நீங்க கொள்கையில் பிடிப்பாக இருந்தால் இந்தி படம் கற்று தற கூடிய பள்ளிகளை வணிகத்துகாக ஏன் நடத்த வேண்டும் இதை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இந்தி திணிப்பா? அல்லது வேறு ஏதாவதா?

திமுக பேச்சாளர்: நாங்கள் நடத்தும் பள்ளிகளில் யாரையும் நாங்கள் வழுகட்டாயமாக தூக்கிட்டு வந்து இந்தி கற்று தறவில்லை அவர்களே விருப்பபட்டு தான் கற்று கொள்கிறார்கள்.
நெறியாளர்: அரசு பள்ளியிலும் அதே தான நீங்கள் விருப்பபட்ட படிக்கலாம்.?

திமுக பேச்சாளர்: அரசு பள்ளிகளில் இந்தியை கற்று தறுவதால் தமிழ் மொழி மட்டும் அழியாது.தமிழ் கலாச்சாரமும் அழிந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நெரியாளார்: அப்படியானால் நீங்கள் நடத்தும் 40 CBSE பள்ளிகள் முலம் கொள்கை ரீதியாக பள்ளி நடத்தி தமிழ் கலாச்சரத்தை அழித்து கொண்டிருக்கிறீர்கள்.

திமுக பேச்சாளர்: வணிக ரீதியாக ஒரு பள்ளி நடத்துவது மற்றும் ஒரு நிறுவனம் நடத்துவதை நீங்கள் கொள்கை ரீதியாக பார்ப்பது தவறு என பேசினார்.
இந்த விவாத நிகழ்ச்சியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயளாலர் ஹச்.ராஜா. திமுக தலைவர்களுக்கு வயிறு வளர்க்க காசு சம்பாதிக்க இந்தி தேவை ஆனால் அவர்கள் அரசியல் பிழைப்புக்கு இந்தி எதிர்ப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் போராடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Friday, June 07, 2019

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் ;மனைவியை கொன்று கணவன் தற்கொலை

தூத்துக்குடி 2019 ஜூன் 4 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி அடுத்த தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் மதிகுமார் (45). இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்குத் திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த தம்பதியருக்கு அஜித்குமார்(25), அஜிஸ்குமார்(25) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், அஜித்குமார் திருமணமாகி திருப்பூர் மாநகராட்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தூத்துக்குடி அருகே உள்ள காற்றாலை நிறுவனத்தில் அஜிஸ் குமார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 25 ஆண்டுகள் கடந்த பிறகு நடத்தையில் சந்தேகப்பட்டு மதிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று இரவு மகன் அஜிஸ்குமார் வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மனைவியுடன் சண்டைபோட்டு ஆத்திரத்தில் மனைவி அமுதாவை கொடூரமாகத் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததால் பயத்தில் மதிகுமார் வீட்டிலே தூக்கில் தொங்கினார். 

இந்தநிலையில், மதிகுமாரின் வீட்டின் கதவு இன்று வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  தம்பதினர் இறந்து கிடந்தனர். இதில், அமுதா கழுத்தில் காயத்துடன் தரையில் பிணமாகக் கிடந்துள்ளார். மதிகுமார் சேலையில் தூக்கில் தொங்கினார். போலீசார் விசாரணையில் மனைவியை கொலை செய்துவிட்டு மதிகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.   போலீசார் தம்பதினர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடியாத்தத்தில்தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இனி 24 மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் - நைட்ல கூட ஷாப்பிங் பண்ணலாம்

24 மணிநேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் ;ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்.. 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம்.அதே நேரத்தில் எந்தவொரு நாளிலும் ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது. அதுபோல ஓவர் டைம் பணியையும், ஒரு நாளுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வைக்கக் கூடாது.


பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அதற்கு எழுத்துப்பூர்வ அனுமதியை அவர்களிடம் நிறுவனங்கள் பெற வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Thursday, June 06, 2019

சற்றுமுன் | அச்சிறுப்பாக்கத்தில் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது சென்னை நோக்கி வந்த கார் பின்புறம் சக்கரம் வெடித்ததில் தலைகீழாக பல்டி அடித்தது.



இதில் காரில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் இருவருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டது.


கார் இன்னும் சற்று வேகமாக வந்திருந்தால் தடுப்புச் சுவரின் மீது மோதி பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கி இருக்கும்.


இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



உஷார் நிபா வைரஸ் பரவிவருகிறது இப்போது கர்நாடகாவிலும்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய்க்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பு 17 பேர் பலியானார்கள்.



 இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி என்பவரும் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவில் மீண்டும் பரவி வருகிறது.

இதனால் கேரள எல்லையையொட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. 

இதற்காக எல்லை பகுதிகளில் முகாம்கள் அமைத்து மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தின் உள்ளே வரும் வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல், கர்நாடக மாநிலத்திலும்  தீவிர கண்காணிப்பு  நடைபெற்று வருகிறது. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களில்  உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட மருத்துவனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்

அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர்.
 அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. 

 இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள்  உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.
"இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின்  கவனத்தை தொடர்ந்து  திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில்  கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும்" என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.
தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை.

 கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.

100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய ஆண் நர்ஸ்

தமிழ் படமொன்றில் நடிகர் வடிவேலுவிடம், வாங்க.  செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது போன்று காட்சிகள் இருக்கும்.  ஆனால் ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



ஜெர்மனி நாட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42).  கடந்த 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இவர், நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார்.  எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை கொண்டு ஊசி போட்டு விடுவார்.  இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார். 

 இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார்.  பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ் ஈடுபடுவார்.

சீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக இருந்துள்ளார்.  
இவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு இவர் கடவுளாக இருந்துள்ளார்.  ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
  கடந்த 2005ம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது.  இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை 97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை. 
 இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ் ஒப்பு கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும் உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  

இதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில், நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது.  வழக்கல்போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை.  அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விசாரணை முடிவில், நீங்கள் மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன் கூறியுள்ளார்.