வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-09
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 21, 2019

நீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் "கட்"!

"நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.." என்று டிரைவர் ஒருவர் சவால் விட, கடைசியில் அந்த சவாலே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கம் பண்டார வடை என்ற ஊர் உள்ளது. இங்கு செல்வதற்காக சென்னைவாசி ஒருவர் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுள்ளார். பண்டாரவடை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துள்ளார்.


ஸ்ரீ லஷ்மி பஸ் சர்வீஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பஸ் போல தெரிகிறது. ஆனால் வழியில் உள்ள ஊரான பண்டாரவடை ஸ்டாப்பிங்கில் நிறுத்த டிரைவரும், கண்டக்டரும் தயங்கி உள்ளனர்.

 ஒரு பயணிக்காக மட்டும் பஸ்ஸை நிறுத்த அவர்களுக்கு இஷ்டம் இல்லை. இது சம்பந்தமான வாக்குவாதத்தில் கண்டக்டர் அந்த பயணியுடன் ஈடுபட்டிருந்தார். 

அந்த சமயத்தில்தான் பயணி நடக்கும் வாக்குவாதத்தை தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டார். அப்போதுதான் டிரைவர் உள்ளே வருகிறார். அங்கு நடக்கும் உரையாடல்தான் இது: 

டிரைவர்: 
"எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு.. முதல்ல கீழே இறங்கு.. "
 பயணி:
நான் ஏன் இறங்கணும்.. டிக்கெட் எடுத்திருக்கேன் டிரைவர்: போகும்போது ஏறு.. பயணி: ஏன் இறங்க சொல்றீங்க.. இந்த வண்டிதானே முதல்ல போகுது. 

அதான் ஏறி உட்கார்ந்திருக்கேன். ரீசன் சொல்லுங்க. பஸ் காலியாதானே இருக்கு. எதுக்கு என்னை இறங்க சொல்றீங்க?
 டிரைவர்: 
நீ டக்குன்னு உள்ளே ஏறி உட்கார்ந்துக்கலாமா?

 பயணி: 
என்ன ரூல்ஸ் இது? காசு தந்துதானே டிக்கெட் வாங்கி இருக்கேன். 
இந்த பஸ் பண்டாரவடைக்குதானே போகுது? 

டிரைவர்:
அதோ அந்த பஸ்கூட அங்கதான் நிறுத்துறாங்க 
 பயணி: 
அது எங்களுக்கு தேவை இல்லை, எந்த பஸ் முதல்ல போகுதோ அதிலதான் ஏற முடியும். உங்க பேர் என்ன?

 டிரைவர்: 
போட்டோ எடுத்துட்டே இல்லை.. பேர் தேவை இல்லை.
 பயணி: 
லஷ்மி டிராவல்ஸ்தானே?

 டிரைவர்: 
 இதோ பார்த்துக்கோ (காக்கி யூனிபார்மில் பொறிக்கப்பட்ட பெயரை வீடியோவில் காட்டுகிறார்) நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.. 

பயணி:  
இன்னைக்கு பாரு நீ .. இது கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்.. இந்த டிரைவர் இப்படி பேசிட்டு இருக்கார் பாருங்க".. என்று பொதுமக்களுக்கு சொல்கிறார் இப்படி பயணி பேசியதுடன் இணையத்திலும் போட்டுவிட்டார்.
 இந்த வீடியோ வைரலாகி, கடைசியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், பஸ் கண்டக்டர், டிரைவர் ரெண்டு பேரையுமே அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், இடிந்த வீட்டை அளப்பதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக சர்வேயர் கேட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயி உயிரிழந்தார். 
(Surveyor who bribed Rs 10,000 near Kumbakonam ... farmer killed in shock)
 கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேப்பத்தூர் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 48). இவர் தனது வீட்டை அளப்பதற்காக 3 மாதம் முன்பு பணம் கட்டி உள்ளார் இதனைத் தொடர்ந்து, இன்று சர்வேயர் மோகனாம்பாள் என்பவர் வந்துள்ளார்.



வீட்டை பாதி அளந்ததும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு விவசாயியான தனசேகரனை வர சொல்லி உள்ளார். அங்கு, தனசேகர் சென்றதும் வீடு அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

 தன்னிடம் 3, 000 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர், உறவினர்களிடம் இருந்ததை வாங்கி, மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். 
மீதி 4,000 கேட்டதற்கு தனசேகரன் இல்லை என்று தெரிவிக்கவே அவரை சர்வேயர் திட்டியதாக தெரிகிறது. இதனால், நெஞ்சு வலியால் சுருண்ட தனசேகரன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். 

 அக்கம் பக்கத்தினர் தனசேகரனை மீட்டு, அருகிலுள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். தனசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதுபற்றி, விவசாயி தனசேகரனின் மகன் சுதர்சன் திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

 இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியில் விவசாயி உயிழந்ததாக தகவல் பரவியதால், திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க.. இப்படி நிக்காதீங்க" என்ற திருநங்கைகளின் குரலை கேட்டதும் பொதுமக்கள் ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.. ஆம்.. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு வேலை போட்டு கொடுத்துள்ளனர்.

 திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.


இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முதலாக 8 திருநங்கைகளை பணியமர்த்தியுள்ளார் மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ்.


ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் இவர்கள்தான் அவர்கள். ஒரு ஷிப்ட்டில் 4 பேர் என 2 ஷிப்டில் 8 பேர் வேலை பார்க்கிறார்கள்.

 திருநங்கைகள் காவலாளிகளாக முதல் முறையாக மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.


"எங்களை நிறைய பேர் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கற சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போ, இப்படி ஆஸ்பத்திரியில் வேலை தந்துள்ளது பெருமையா இருக்கு. 

அதுக்கு இந்த ஆஸ்பத்திரி டீன், சுகாதார அமைச்சருக்கு எங்கள் நன்றி. இதே போல் மற்ற துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று இவர்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.


சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை போல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற வாலிபர் கடந்த 14 ந்தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டை சேர்ந்த தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தையல்கள் போடப்பட்ட நிலையில் தேன்மொழி கிசிச்சை பெற்று வந்தார்.

 10 நாட்கள் வரையில் பேசக் கூடாது என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தி இருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தேன்மொழி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தேன்மொழியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் சுரேந்தர் ரெயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

 இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சுயநினைவு இல்லாமல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேன்மொழியை, சுரேந்தர் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பதை போலீசாரால் முழுமையாக அறிந்து கொள்ள முடிய வில்லை.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Thursday, June 20, 2019

இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. குறிப்பு உள்ளே

"இதுதான் கடைசி நொடி.." என்ற அந்த தாய்க்கும் தெரியாது, அவரது மகளுக்கும் தெரியாது. மகள் கண்முன்னே லாரி மோதி தாய் இறந்ததை பார்த்து கதறினாள் மகள்..

 இது சம்பந்தமான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்து வருகிறது. சேலம் அருகே தாரமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. அங்குள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வருகிறார். 
இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார். தனது 12 வயது மகளுடன் வசித்து வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள். 

நேற்று மாலை கிறிஸ்டி தன் மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். தாரமங்கலம் பிரதான சாலையில் இருவரும் நடந்து வந்தனர்.


கிறிஸ்டி 
 அந்த சமயம், வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, கிறிஸ்டி மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். ஆனால் அந்த லாரியானது, கிறிஸ்டி மீது ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு நடுவே மிக கொடூரமாக டீச்சர் சிக்கி கொண்டார்.

துடிதுடித்தார்
இந்த கொடுமை அனைத்துமே மகள் கன்முன்னாடியே நடந்து. 12 வயது குழந்தை அலறி துடித்து அலறினாள். மகள் வெடித்து கதற, அங்கேயே துடிதுடித்து தாய் உயிரிழந்தார். ஆனால் அந்த லாரி டிரைவரோ, விபத்தை ஏற்படுத்தியதுடன், வண்டியை நிற்காமல் வேகமாக ஓட்டி சென்றுவிட்டார்.


விசாரணை 
இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இயங்கிவரும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட லாரியை பிடித்துவிட்டனர். சட்டவிரோதமாக லாரியில் செம்மண் அள்ளிக் கொண்டு போயுள்ளார் டிரைவர் கிருஷ்ணன்.


வீடியோ வைரல் 
 அவரை போலீசார் வலை வீசி தேடி வருவதுடன், விபத்து நடந்த வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். மகளின் கண்முன்னே தாய் இறந்த இந்த வீடியோ காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க செய்து வருகிறது.


தக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியர் அடித்ததில் மாணன் படுகாயம் காயமடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிட்சைக்காக அனுமதி ஆசிரியரிடம் இரணியல் போலீசார் விசாரணை.

 கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ஜோஸ்-சகாய அனிதா தம்பதியரின் மகன் 17-வயதான ஜெறின் ஜோசப் வட்டம் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பாடப்பிரிவில் பயின்று வருகிறார்.


கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில் தற்போதே மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டு பாடங்களும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் அளித்து அவைகளை மனப்பாடம் செய்து தினமும் வகுப்பறையில் ஒப்புவிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், முறையாக ஒப்புவிக்காத மாணவர்கள் இரவு படிப்புக்காக பள்ளியிலேயே தங்க வைத்து ஒப்புவித்த பின் வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 
 இவ்வாறு ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களும் இதேப்போல் பாட சுமைகளை அளிக்கும் நிலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்வது சாத்தியமில்லாத நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜெறின்ஜோசப்பிடம் மாலை வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சுமிதா தான் அளித்த வீட்டு பாடத்தை ஒப்புவிக்க கூறியுள்ளார். 

ஆனால் ஒப்பிவிக்க தெரியாமல் ஜெறின்ஜோஸப் இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமிதா அவரை சரமாரியாக கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் மாணவனுக்கு இடது கை மணிக்கட்டு முழங்கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

 ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் பள்ளிலேயே தங்க வைத்து இரவு எட்டு மணிவரை தாங்களே வைத்தியம் செய்துள்ளனர். ஆனால் மாணவனுக்கு வலி அதிகரிக்கவே பெற்றோரை அழைத்து ஒப்படைத்தனரதர்.


அவர்கள் மகனை சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆசிரியை சுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுவரை தோன்றிடாத "ஸ்ட்ராபெர்ரி மூன்" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா?

நம்மில் பலரும் இரவு வானில் முழு நிலவைக் கண்டால், ஐயோ எத்தனை அழகு என்று முழு நிலவைக் கண்டு சொக்கிப்போய் இருப்போம். இன்னும் சிலர் முடிந்தவரை நம் மொபைல் போனில் ஜூம் செய்து, நிலவைப் படம்பிடித்து வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் கூட போட்டியிருப்போம்.


அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன் ஸ்ட்ராபெர்ரி மூன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸில் பதிவிடலாம்.

 இதுவரை உங்கள் வாழ்வில் கண்டிடாத புது நிற நிலவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பார்க்க இயலும் என்று நாசா தற்பொழுது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

ஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன் 
 ஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படும் இந்த நிலவிற்கு 'ஹனி மூன்' அல்லது 'மீட் மூன்' என்று வேறு சில பேர்களும் இருக்கிறது.


ஸ்ட்ராபெர்ரி மூன் என்று இந்த நிலவிற்கு பெயரிட காரணம் அதன் நிறம் தான். ஸ்ட்ராபெர்ரி பழத்தை போல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாய் பிரகாசிக்குமாம்.

பிங்க் நிறத்திலும் நிலவு 
இன்று இரவு முதல் துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.


நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன? 
 கட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.


அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்
அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


இரவு வானில் தோன்றும் இந்த அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவைப் பார்ப்பதற்குத் தவறிவிடாதீர்கள்.


வெண்மையாய் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது 
 பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடு வானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்:பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலைவெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது

சிக்கமகளூரு

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சிக்கமகளூரு அருகே புச்சனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுசித்ரா கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் மஞ்சு தனது மனைவி சுசித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

கழுத்தை நெரித்து கொலை

தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மஞ்சுவுக்கு, பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.


 இந்த நிலையில் மஞ்சு, ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று மஞ்சுவிடம், ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு குழந்தையை கொல்ல முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்த மஞ்சு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

 இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா கதறி அழுதார். அவரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மஞ்சு தப்பி ஓடிவிட்டார்.

கைது- பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பெண்ணாக பிறந்ததால் குழந்தையை மஞ்சு கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.


 இதுகுறித்து சுசித்ரா அளித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மஞ்சுவை போலீசார் கைது செய்தனர்.


பெண்ணாக பிறந்ததால் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொறுக்கி போலீஸ் | ரவுடி போலீஸ் | சின்னசேலம் SI | Sinnasalem rowdy SI Shanmugam

இவரை பணிநீக்கம் செய்யும்வரை ஷேர் செய்யுங்கள்
Click to watch video



Wednesday, June 19, 2019

8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்!

8 வயசு பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாசம் செய்த 65 வயசு தாத்தாவுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.




திருப்பூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் அனீபா. வயசு 65. சென்ற வருடம் வீட்டு பக்கத்தில் 8 வயசு பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது தன் வீட்டு மாடிக்கு சிறுமியை அழைத்து சென்ற அனீபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

 இதை அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோதுதான், தாத்தா விஷயம் வெளியே தெரிந்தது.


 இது சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.



இது சம்பந்தமான விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

 அனீபாவிற்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிக் டாக்- ஆசையில் கைதான இளைஞர்: காரணத்தை கேட்டால் சிரிப்பீர்கள்.!

இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த டிக்டாக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், இந்த செயலி மூலம் நாட்டில் பல்வேறு புதிய பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.




முனனர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது.

ஐபோன் எக்ஸ்எஸ் 
 அதன்படி டிக்டாக் மோகம் காரணமாக புதுடெல்லியில் 20-வயது இளைஞர் ஒருவர் தற்போது சிறையில் தள்ளப்பட்டிருக்கறார்.

 கடந்த புதன்கிழமை சப்ரா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார், அது என்னவென்றால் நான் எனது ஐபோன் எக்ஸ்எஸ் போனை விற்பனைக்காக ஒ.எல்.எக்ஸ் இணையத்தில் பதிவேற்றி இருந்தேன்.

ஜதின் நாகர் 
 இதை பார்த்துவிட்டு ஜதின் நாகர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு ஐபோனை வாங்க விருப்பம் தெரிவித்தார், விலை ரூ.80,000 என முடிவு செய்துகொண்டோம்.


பின்பு மாலை 6மணி அளவில் போனை கொடுக்க நாங்கள் ப்ரீத் விஹார் சிக்னல் அருகே சந்தித்துக்கொண்டோம். அப்போது எதிர்பாராத நேரத்தில் எனது போனை எடுத்துச் சென்றுவிட்டார் எனக் கூறி புகார் அளித்தார்.

போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்
அதன்பின்பு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஜதின் நாகர்-ஐ கைது செய்து அவரிடம் இருந்த போனை கைப்பற்றினர், பின்பு விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், பொதுவாக போனை திருடுபவர்கள் அடுத்த நிமிடமே விற்று விடுவார்கள் அல்ல போனை அனைத்து விடுவார்கள்.

 ஆனால் இதை செயயாமல் அவர் வைத்திருந்ததற்கான காரணத்தை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம்
 உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரை சேர்ந்த ஜதின் நாகர் டிக்டாக் செயலியில் வீடியோக்களை ஏற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார், ஆனால் தன்னிடம் நல்ல போன் இல்லாத காரணத்தால் தரமான வீடியோக்களை பண்ண முடியாமல் இருந்திருக்கிறார்.

எந்த கிரிமினல் வழக்கும் இல்லை ஐபோன் இருந்தால் அதன் வீடியோ மிக அருமையாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று கருதி அவரிடம் போனை திருடியிருக்கிறார்.
 மேலும் இவர் ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள இவர் மீது இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதே உண்மை.




ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..

239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஹெச் 370 விமானம் என்ன கதியானது என்பது பற்றி, தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 கடலில் விமானத்தை செலுத்தும் முன்பாக பயணிகள் அனைவரையும், விமானி கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 2014ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு, புறப்பட்ட எம்ஹெச் 370 என்ற போயிங் ரக விமானம், எங்கே சென்றது என தெரியாமலேயே மாயமாகிவிட்டது.

முழு தகவல் 
 5 வருடங்களை தாண்டியும்கூட, மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, சர்வதேச விமானப் போக்குவரத்து சமூகம். 

 உலகின் மிகப்பெரிய விமான மர்மம் வழக்காக இது பார்க்கப்படுகிறது. மாயமான மலேசிய விமானம், எங்கே விழுந்தது, அதில் இருந்த பயணிகள் நிலை என்ன ஆனது என்பது குறித்தெல்லாம் இதுவரை உறுதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

அவ்வப்போது விசாரணை மற்றும் யூகங்கள் அடிப்படையில்தான் சில தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. தற்போது, புதிதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த விமானத்தின் பைலட் பற்றியது.

விமானி காரணம் 
 மலேசிய விமானத்தை இயக்கிய பைலட், ஜஹாரி அகமது ஷா (53), இந்த மொத்த சம்பவத்திற்கு சூத்திரதாரி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜஹாரி அகமது ஷாவின் நண்பர்களிடம், விமானத்துறை சார்ந்த நிபுணத்துவ எழுத்தாளர் வில்லியம் லாங்க்கவீஷ் உரையாடி சில தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

கள்ளத் தொடர்புகள் 
 ஆம்.. ஜஹாரி அகமது ஷாவுக்கும், விமான பணிப் பெண்கள் சிலருக்கும் கள்ளத் தொடர்புகள் இருந்துள்ளன. இதனால், அவரது மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில், ஜஹாரி அகமது ஷாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன்பிறகு, தனிமை அறையிலேயே அதிக காலத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார், ஜஹாரி அகமது ஷா. மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதெல்லாம் சகஜம் 
 இதுகுறித்து, ஜஹாரி அகமது ஷாவின் சக பைலட் ஒருவர் கூறுகையில், "ஜஹாரி அகமது ஷா திருமண பந்தம் சரியானதாக அமையவில்லை. கடந்த காலங்களில், விமான பணிப்பெண்கள் பலருடன் அவர் படுக்கையை பகிர்ந்துள்ளார். 

அதனால் என்ன? நாங்கள் எல்லோருமே செய்வதுதான் இது. பல உலக நாடுகளுக்கும் இந்த இளம் பெண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டேதானே பறக்கிறோம். இது ஜஹாரி அகமது ஷாவின் மனைவிக்கும் தெரியும்" என்றார்.

பைலட்டுக்கு மன அழுத்தம் 
 இதுபற்றி வில்லியம் லாங்க்கவீஷ் தான் எழுதியுள்ள கட்டுரையில், கூறுகையில், மலேசிய விமானம் மாயமானது குறித்து விசாரிக்கும், அதிகாரிகள் மற்றும், உளவுத்துறை சமூகத்தினருக்கு, பைலட்டின் மனநிலை குறித்து வலுவான சந்தேகங்கள் உள்ளன. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி என்கிறார்.

ஆக்ஸிஜன் இணைப்பு 
 விமானம் 40000 அடி உயரத்தில் பறந்தபோது, கேபினுக்குள் செல்லும், ஆக்ஸிஜன் இணைப்பை பைலட், ஜஹாரி அகமது ஷா துண்டித்துள்ளார். இதையடுத்து, ஆக்ஸிஜன் முகமூடியை பயணிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

 ஆனால், அவை 15 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. எனவே, பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் இன்றி, அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். இதன்பிறகு, இந்தியப் பெருங் கடலுக்குள் விமானத்தை செலுத்தி, ஜஹாரி அகமது ஷா தற்கொலை செய்திருக்க கூடும் என்கிறது புதிய ஆய்வு முடிவுகள். 


புதிது கிடையாது
 இவ்வாறு பைலட்கள், தற்கொலை செய்வதற்காக, பயணிகளையும் சேர்த்து கொல்வது இது புதிது இல்லை. 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம், எகிப்து ஏர் விமானத்தின் பைலட், மாசசூசெட்ஸ் பகுதியில், விமானத்தை மோதச் செய்தார். 

2015ல், பிரெஞ்சு நாட்டின் ஆல்ப்ஸ் மலையில், ஜெர்மன்விங்ஸ் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவத்திலும், பைலட்டின் தற்கொலை முயற்சிதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

மனைவியுடன் சண்டை
 ஏம்ப்பா.. பொண்டாட்டி கூட சண்டை போட்டு தற்கொலை செய்வதே தப்பு. இவரு என்னடான்னா, 239 பயணிகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.

 இனிமேல், பைலட்டுகள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை உளவுத்துறையை வைத்து கண்காணித்து உறுதி செய்தபிறகே, விமானத்திற்குள் காலெடுத்து வைக்கச் சொல்லனும் போல இருக்குதே!


கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்

கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். 
 அப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

 போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.

ஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது.

"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். 

இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.


வைரல் டீச்சர் | Viral Teacher | Today Trending

Click to watch below video.....