எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
தாலி கட்டின உடனேயே அதனை அறுத்து எறிந்துவிட்டு, தனக்கு பிடிச்ச
காதலனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார் ஈஸ்வரி!
திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர்
ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். ஈஸ்வரி அதே ஊரை சேர்ந்த பெண்தான். 5
வருடங்களுக்கும் மேலாக இவர்கள் காதலித்து வந்தனர்.
இருவரும் வேறு வேறு சாதி.. வழக்கமான எதிர்ப்பு வீட்டிலிருந்து
கிளம்பியது. இதனால் ஈஸ்வரிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்து
வைத்தனர்.
ஆனால் ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, காதலன் குமாரை அழைத்து
கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து
கொண்டார். உடனடியாக சென்னைக்கும் குடியேறினார்.
இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த
அவர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல்
விடுத்ததுடன், குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று
ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதைதவிர ஒரு லட்சம் ரூபாய்
அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்தார்களாம்.
எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும்,
திருமணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், திருவண்ணாமலை
மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார்
அளித்துள்ளனர்.
கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் சாதி
மறுப்பு திருமணம் செய்த கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
மனைவி உயிரிழக்கக் காரணமான டாஸ்மாக் கடையை போராடி மூட வைத்ததுடன்,
அவரது உடலை, விபத்து நடந்த இடத்திற்கு அருகிலேயே கணவன் புதைத்த சம்பவம்
நம்மை புரட்டி போட்டுள்ளது.
கோவையை அடுத்த கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரமேஷ். இவர் ஒரு
டாக்டர். இயற்கை ஆர்வலரும்கூட. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல
காரியங்களை முன்னெடுத்து செய்து வருபவர்.
இவருக்கு ஷோபனா என்ற மனைவி, சாந்திதேவி என்ற மகள் உள்ளனர். மகள்
ஆனைகட்டியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இவரை ஸ்கூலிலிருந்து தினமும்
அழைத்து வருவது ஷோபனாதானாம்.
உயிரிழந்தார்
அப்படித்தான் வண்டியில் உட்காரவைத்து மகளை அழைத்து வந்தபோது, தாறுமாறாக
வந்த பைக் ஒன்று ஷோபனாவின் ஸ்கூட்டரில் மோதியது. இந்த பயங்கர மோதலில் ஷோபனா
சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சாந்திதேவி பலத்த அடியோடு
உயிருக்குப் போராடினார்.
கதறினார்
பைக்கில் வந்த பாலாஜி என்பவர் ஃபுல் போதையில் வண்டியை ஓட்டிவந்து இப்படி
மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. விரைந்து வந்த போலீசார், இந்த
விபத்து குறித்து உடனடியாக ரமேஷூக்கு தகவல் சொன்னார்கள். கண்ணெதிரே ரத்த
வெள்ளத்தில் மனைவி பிணமாகவும், மகள் உயிருக்குப் போராடியதையும் கண்டு ரமேஷ்
கதறினார்.
டாஸ்மாக்
உடனடியாக மகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். ஷோபனாவின் உடலை
கட்டிப்பிடித்து கதறி அழுதார். மனைவியின் சடலத்தை நடுரோட்டில் வைத்து,
டாஸ்மாக்கை மூடுங்கள் என்று ஆவேச போராட்டம் நடத்த துவங்கிவிட்டார்.
அவருக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
இதனால் விஷயம் பெரிசானது. "மதுவால் இனியொரு குடும்பம் பாதிக்கப்படக்
கூடாது. உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று ஆவேசமாக சொன்னார்
சீமான். இதையேதான் டாக்டர் ராமதாசும் அறிக்கை மூலம் வலியுறுத்தினார்.
சமரசம்
விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் ரமேஷிடம் சமரசம் பேசினர். ஆனால் ரமேஷின்
உறுதியை பார்த்து மிரண்ட அதிகாரிகள் கடையை அங்கிருந்து மாற்றுவதாக எழுத்து
பூர்வமாக எழுதி தந்தார்கள்.
இதையடுத்து சொன்னபடியே குறிப்பிட்ட மதுக்கடை
மூடப்பட்டது. சோபனாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்து, ரமேஷிடம்
ஒப்படைக்கப்பட்டது.
நல்லடக்கம்
மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ், விபத்து நடந்த இடத்திற்கு
அருகிலேயே உள்ள மயானத்தில் பழங்குடியின முறைப்படி அடக்கம் செய்தார். தண்ணி
அடித்துவிட்டு வண்டியை ஓட்டி, இனி யார் உயிரையும் பறித்துவிடக்கூடாது
என்பதற்கான அடையாளமாகத்தான் ஷோபனாவின் நல்லடக்கத்தை நடத்தி உள்ளார் ரமேஷ்.
கோரிக்கை
நம்மில், எத்தனை பேருக்கு ரமேஷின் இந்த மனநிலையும், அந்த மனநிலையின்போது
வெளிப்படுத்தும் நிலைப்பாட்டின் உறுதியும் இருக்கும் என்று தெரியாது. ஆனால்
இனி ஒரு உசுரு இப்படி அநியாயமாக போய்விடக்கூடாது என்பதுதான் அனைவரின்
எதிர்பார்ப்பும்!
உலகம் முழுவதும் நடக்கும் கொலைகளுக்குக் காரணம் மண்ணாசை பொன்னாசையும்,
பெண்ணாசையும் தான் சமீபகாலமாக கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
கலிபோர்னியாவில் காம ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன், பத்து மாத குழந்தைக்கு தாயான
பெண்ணை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறான். தவறான ஆசைக்கு மறுத்த அந்த
பெண்ணை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இதில் அந்த பச்சிளம் குழந்தை
படுகாயம் அடைந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட அந்த படுபாதகனின் பெயர் மார்கோஸ் எசார்டி என்பதாகும்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் டெஸிரி மேனாக். 18 வயதான அந்த இளம்
பெண் கடந்த வாரம் தனது பத்துமாத குழந்தையோடு பிறந்தநாள் பார்ட்டிக்கு
சென்றிருந்தார்.
அங்கே நண்பர்களுடன் மார்கோஸ் எசார்டியும் வந்திருந்தான். டெஸிரியை
பார்த்த உடன் அவள் மீது ஆசைப்பட்டு கையை பிடித்து இழுத்தான். அவனது தொடுகை
டெஸிரிக்கு அருவெறுப்பாக இருக்கவே கையை உதறிக்கொண்டு அவனைப் பிடித்து
திட்டினாள்.
ஆனாலும் விடாத எசார்ட்டி தகாத முறையில் நடந்து கொண்டான்.
வலுக்கட்டாயமாக இழுத்து அணைக்க முயற்சி செய்தான்.
அவனை தள்ளிவிட்டு விட்டு தனது குழந்தையோடு நண்பரின் காரில் ஏறி
புறப்பட்டாள். அந்த காரை பின்தொடர்ந்து சென்ற எசார்ட்டி தன்னிடம் இருந்த
துப்பாக்கியால் சுட்டான்.
இதில் துப்பாக்கிக்குண்டு காருக்குள் இருந்த
பத்துமாத குழந்தையின் மீது பாய்ந்தது. கார் டிரைவர் வேகமாக காரை
ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தையை
சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் பாய்ந்திருந்த
துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது என்றாலும் அந்த பச்சிளம் குழந்தை
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை மீது
துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வெறியன் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியின்றி
மீது பார்ட்டியில் பங்கேற்கச் சென்று விட்டான்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில்
கலிபோர்னியா மாகாண போலீசார் எசார்ட்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது
செய்து சிறையில் அடைத்தனர்.
குடிகாரன் சொன்ன பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அவர்கள் சொல்ற
விஷயம் மட்டுமல்ல செய்கின்ற செயலும் அப்படித்தான். ஆல்கஹால் உள்ளே போனால்
ஆப்போஷிட்ல யார் வர்றாங்கன்னு கூட தெரியாத அளவுக்கு குடிக்கிறது தான் நிறைய
பேரோட பழக்கமாக உள்ளது.
அளவுக்கு அதிகமாக குடிப்பது தன்நிலை மறந்து
உயிருக்கே சில நேரங்களில் ஆபத்தாகக் கூட முடிந்து விடுகிறது.
அப்படித்தான் ஒருவர் எக்குத் தப்பா குடிச்சு பேதையில என்ன செய்ஞ்சு
இருக்காருன்னு பாருங்க. குடிச்சாலே போதும் சிலர் முரட்டுத்தனமாக கூட
நடந்துப்பாங்க.
நினைவே இல்லாமல் இருந்தால் இந்த பையன் நிலைமை தான்
உங்களுக்கும்.
தன்னுடைய குடிபோதையில் சைடிஸ்னு நினைச்சு சாவிய விழுங்கின கொடுமைய பாருங்க.
நடந்த விபரீதம்
ஷாங் என்ற சீன நாட்டைச் சார்ந்த 26 வயது இளைஞன் தன்னுடைய வார விடுமுறையை
கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
பார்ட்டியில்
நல்லா தண்ணிய போட்டு ஆடி கூத்தடிச்சுட்டு வீட்டுக்கு வரும் போது தான்
வீட்டுச் சாவி காணோம்ங்றது தெரிய வந்துள்ளது. வீட்டிற்கு உள்ளே தூங்கிக்
கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி தன்னுடைய சாவி தொலைந்ததை
தெரிவித்துள்ளார்.
மார்பகத்தில் வலி
அடுத்த நாள் காலையில் எழும் போது அவனுக்கு நெஞ்சு முழுவதும் எரிச்சல்
ஏற்பட்டுள்ளது. உடனே அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையை நாடி
உள்ளார்.
அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது தான்
அவனது மூச்சுக் குழாயில் சாவி சிக்கியது தெரிய வந்திருந்தது. அந்த
பையனுக்கே தெரியவில்லை கீ எப்படி தன் வாய்க்குள் போனது என்று. அந்தளவுக்கு
இரவில் பேதை தலைக்கேறி இருந்துள்ளான்.
அறுவை சிகிச்சை செய்யும் நிலை
மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்து சாவியின் நிலையை கண்டறிந்து அறுவை
சிகிச்சை செய்து அதை நீக்கி உள்ளனர். மேலும் இந்த சாவி அந்த பையனின் குடலை
கிழித்து உள்ளதாகவும் உணஙுக்குழாயையும் கிழித்து உள்ளதாகவும் மருத்துவர்கள்
கூறுகின்றனர். எப்படியோ மருத்துவர்கள் சாவியை எடுத்துவிட்டனர்.
என்ன ஆகும்?
காயங்கள் ஆற மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை இவர் குடிக்காமல் இருந்தால்
நல்லது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத பத்தி நீங்க
என்ன நினைக்கீங்க. தன்நிலை மறக்கும் குடி அவசியம் தான, யோசிங்க மக்களே!
அவ்வப்போது நமது வாழ்வில் சில அதிசயங்களை சந்தித்து பிரமித்துப்
போவோம். குறிப்பாக மருத்துவ உலகில் சில விஷயங்கள் விநோதமாக நடைபெறும். இதனை
ஆங்கிலத்தில் "மெடிகல் மிராக்கில்" என்று கூறுவா். அது போல் ஒரு வினோத
சம்பவத்தைத் தான் நாம் கானவிருக்கிறோம்.
பொதுவாக நாம் நமது பிள்ளைகளைத் திட்டும்போது," நான் என் இரத்தத்தை
வியர்வையாக்கி உன்னை படிக்க வைக்கிறேன்.. " என்று கூறுவோம். நாம் அவ்வளவு
கடினமாக உழைக்கிறோம் என்ற பொருளில் இப்படி நாம் கூறுகிறோம். ஆனால்
உண்மையில் ஒரு பெண்ணுக்கு வியர்வையாக இரத்தமே வெளியாகிறது என்று கேட்டால்
உங்களுக்கு எப்படி இருக்கும். தலை சுற்றுகிறதா? வாருங்கள் தொடர்ந்து இதனைப்
பற்றி அறிந்துக் கொள்வோம்.
மருத்துவ உலகில் சில வழக்குகள்
எப்படி இது சாத்தியம்?" என்ற கேள்வி எழ வைக்கும். இதுவும் அப்படி ஒரு அரிய
செயல் தான். 10 மில்லியன் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இத்தகைய சம்பவம்
நடைபெறும் சாத்தியம் உண்டு.
ஒரு 21 வயது பெண். அவரைப் பற்றிய மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த
பெண்ணை ஒரு முற்றிலும் விச்சிதிரமான நிலைக்காக மருத்துவமனையில்
அனுமதித்திருந்தார்கள். அதாவது அவருக்கு வியர்க்கும்போது அவருடைய முகம்,
உள்ளங்கை போன்ற இடங்களில் வியர்வையாக இரத்தம் வெளியேறுகிறது. குடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா?
நம்ப முடிகிறதா?
இதனை கேட்பதற்கு நம்பமுடியாமல் இருந்தாலும், இது ஒரு உண்மையான நிலை ஆகும்.
இப்படி சில வழக்குகள் மிகவும் அரிதாக மருத்துவ வரலாற்றில் காணப்படுகிறது.
இத்தாலிய மருத்துவர்கள் இந்த பெண்ணை பரிசோதித்து அவருடைய திகிலூட்டும்
அறிகுறியை எண்ணி இந்த நிலை பற்றிய குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் அந்தப்
பெண்ணின் சருமத்தில் இரத்தம் வெளியேறுவதற்கான எந்த ஒப்ரு புண்ணும் அல்லது
சிராய்ப்பும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்தியாக
இருந்தது.
ரத்தப்போக்கு
திடீரென்று இப்படி இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உருவாகக்கூடிய எந்த ஒரு
குறிப்பிட்ட காரணமும் அந்தப் பெண்ணின் உடல் நிலையில் இல்லை என்பது மருத்துவ
பரிசோதனையில் தெரிய வந்தது.
மேலும் அந்தப் பெண் உறங்கும்போதும் உடல்
செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போதும் இரத்தம் வெளியேறுவது
அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
வியர்வை
இப்படி வியர்வையாக இரத்தம் கடுமையாக வெளியேறுவதைக் கண்ட அந்தப் பெண்
மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்டார். அவருடைய வழக்கு பற்றி கனடா மருத்துவ
நிறுவன பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.
இந்தப் பெண்ணின் நிலை பற்றி மருத்துவர்கள் இன்னும் விரிவாக விளக்கும்போது,
இந்த வித அசாதாரண அறிகுறியைக் கொண்டு இந்த பெண் கடந்த மூன்று ஆடுகளாக
அவதிப்படுவதாகவும், ஒவ்வொரு முறை இப்படி ஏற்படும்போது இந்த நிலை தொடர்ந்து
ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் நீடிப்பதாகவும் கூறினர்.
இந்த வகை அரிய
பாதிப்பு காரணமாக, உணர்வு ரீதியாக அந்தப் பெண் பெருமளவில்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எப்போதும் தனித்து இருப்பதாகவும் கூறினர்.
ரத்த அணுக்கள்
எண்ணிக்கை
அந்தப் பெண்ணின் இரத்த அணுக்கள் எண்னிக்கை மற்றும் இரத்த உறைவு செயல்பாடு
போன்றவை வழக்கமான நிலையில் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறுதியாக இந்தப் பெண்ணுக்கு ஹெமடோஹிட்ரோசிஸ் (hematohidrosis) என்ற
பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை பாதிப்பு 10 மில்லியன்
மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் என்பதும் அறியப்படுகிறது.&bsp;
அவரது
மருத்துவ சிகிச்சை பற்றி மருத்துவர்கள் விளக்கினர்.
அந்தப் பெண்ணிற்கு ப்ரோப்ரன்னோலோல்(propranolol) என்னும் பீட்டா ப்ளாக்கர்
மருந்து கொடுக்கப்படுவதாக கூறினர்.
இந்த மருந்து அவருடைய அறிகுறிகளைக்
கணிசமாகக் குறைக்கும் என்றும் துரதிர்ஷ்டவசமாக இந்த பாதிப்பில் இருந்து
அவர் முற்றிலும் வெளிவர முடியாது என்றும் தெரிவித்தனர்.
இந்த நோய் பாதிப்பிற்கான காரணம் பற்றி முற்றிலும் தெரியவில்லை என்றாலும்,
மிக அதிக அழுத்தம் மற்றும் பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று
கூறப்படுகிறது.
கயித்து கட்டில்மேல தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி மாயமானதோ
தெரியவில்லை.. வீட்டின் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரிய
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கனகராஜ் - காஞ்சனா. கனகராஜ்,
ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டரை
வயதில் ஒரு பெண் குழந்தை.. பெயர் அம்ருதா!
விளாங்குறிச்சியில் தோட்டத்துப் பகுதியில் காஞ்சனாவின் பெற்றோர் வீடு
உள்ளது.
இங்கு நேற்றிரவு இவர்கள் தங்கி இருந்தனர். இவர்களது வீட்டிற்கு
உறவினர்கள் சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து
சாப்பிட்டு, படுக்க போனார்கள்.
தூங்க சென்றனர்
தம்பதி இருவரும் குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே தூங்கினார்கள். வந்திருந்த
சொந்தக்காரர்களில் சிலர் வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலில்
தூங்கியுள்ளனர். இன்று அதிகாலை இரண்டரை மணிக்கு, குழந்தைக்கு பால்
கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்க வைத்துள்ளார் காஞ்சனா.
காணவில்லை
காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தையை காணோம்.
எங்காவது விளையாடி கொண்டிருப்பாளோ என்று வீட்டுக்கு வெளியே வந்து
பார்த்தால், அங்கும் இல்லை. இதனால் அந்த தெரு உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும்
குழந்தையை தேடி அலைந்தனர்.
பாழடைந்த கிணறு
அதேபோல, வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கருவேலங்காட்டுப் பகுதியில்
வந்தும் தேடினார்கள். அப்போது, பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா
கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.
கயிறு கட்டி குழந்தையை தூக்கினார்கள்.
அம்ருதா கண்ணே திறக்கவில்லை.. இதனால் மயங்கி இருக்கிறாள் என்று
ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால், குழந்தை ஏற்கனவே
இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர்.
விசாரணை ஆரம்பம்
வீட்டுக்கு உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி இருந்தது? ஒருவேளை
விளையாட வந்திருந்தாலும், இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? அல்லது
குழந்தையை யாராவது கிணற்றில் வீசி விட்டார்களா? அல்லது குடும்ப தகராறா?
என்ன காரணம்? என்றெல்லாம் இதுவரை தெரியவில்லை.
ஆனால் துருதுருன்னு
விளையாடிட்டு இருந்த குழந்தை, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த
பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பீளமேடு போலீசார்
விசாரித்து வருகிறார்கள்.
சர்வதேச அளவில் தற்போது செல்ஃபி கலாச்சாரம் பெருகி விட்டது. முக்கிய
பிரமுகர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது சர்வ
சாதாரணமாக மாறிவிட்டது.
ஜூன் 21-ந்தேதி சர்வதேச
செல்ஃபி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று செல்ஃபி தினம்
கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில தங்களின்
செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இன்றைய
நிலை இப்படி இருக்க கடந்த 180 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி தோன்றி
இருப்பது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் கார்னெலியஸ்
என்பவர் காமிராவில் தன்னை தானே போட்டோ (செல்ஃபி) எடுத்தார். வேதியியல்
நிபுணரும், புகைப்பட ஆர்வலருமான இவர் பிலாடெல்பியாவை சேர்ந்தவர்.
செல்ஃபி என்ற வார்த்தை 2002-ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹோப் என்பவர் தனது 21-வது பிறந்த தினத்தை
கொண்டாடினார்.
அப்போது குடி போதையில் தான்ஒருவரை முத்தமிட்டபடி எடுத்த
போட்டோவை வெளியிட்டார். அதுவே செல்ஃபி ஆனது. இந்த வார்த்தை 2013-ம் ஆண்டு
ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது.
ஆனால் முதன் முறையாக சர்வதேச செல்ஃபி தினம் 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டது. டி.ஜே.ரிக் நிலி இதை தொடங்கிவைத்தார்.
திருமணம் செய்து குடித்தனம் நடத்தி மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர்
மன அழுத்தத்தால் கத்தியால் குத்தி கொன்றுள்ளான் ஒரு கொடூர கணவன். பச்சிளம்
குழந்தை என்றும் பாராமல் கத்தியால் அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட கொன்று
குவித்துள்ளான்.
மெக்ராலி பகுதியில் இருந்த அந்த வீட்டில் அப்படி ஒரு
சம்பவம் நிகழும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இன்றைய விடியல்
அந்த பகுதியின் அக்கம் பக்கத்தினருக்கும் அதிர்ச்சிகரமானதாகவே இருந்தது.
கொடூர மனம் படைத்த அந்த கொலையாளியின் பெயர் உபேந்தர் சுக்லா என்பதாகும்.
இவர் அர்ச்சனா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
அவர்களுக்கு 7 வயதிலும் 2 மாதத்திலும் பெண் குழந்தைகளும் 5 வயதில்
ஒருமகனும் இருந்தனர்.
வாழ்க்கையில் சைத்தான் நுழைந்து விட்டான் போல. என்ன நடந்தோ சண்டையோ
சச்சரவோ அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தான்.
இன்று காலையில் அர்ச்சான குழந்தைகள் இருந்த அறை மட்டும் திறக்கவேயில்லை.
அர்ச்சனாவின் அம்மாவும் பதறிப்போய் அக்கம் பக்கத்தினரிடம் தகவல்
தெரிவிக்கவே அவர்கள் வந்து கதவை உடைத்துப்பார்த்தனர்.
அங்கே சுக்லா கையில்
கத்தியுடன் அமர்ந்திருந்தான் அவன் அருகே அர்ச்சனாவும் மூன்று குழந்தைகளும்
கையில் ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தனர்.
இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுக்லாவை கைது செய்து விசாரணை நடத்தினார்.
அவன் மன குழப்பத்தில் நால்வரையும் கொன்றதாக எழுதியிருந்தான். நள்ளிரவு 1
மணி முதல் ஒன்றரை மணிக்குள் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.
மன அழுத்தம் ஒரு மனிதனை இப்படி எல்லாம் கூட செய்ய வைக்குமா? கொலை வரைக்கும்
கொண்டு செல்லுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கொலையாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடத்தையில் சந்தேகம், கள்ளக்காதல் போன்ற காரணங்களினால் கொலைகள் அதிகம்
நடந்து வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு கொடூரன்
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தைகள், மனைவியை கழுத்தறுத்து
கொன்று விட்டு தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார்
அந்த நபரை கைது செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பஞ்சாபில் ஒரு நபர் கடந்த மாதம் ஐந்து பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை ஆண்
குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது
போன்ற கொடூர மனம் படைத்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒருத்தர் ஒருமுறை, ரெண்டுமுறை புதுமாப்பிள்ளை ஆகலாம்.. ஆனால் மிஸ்டர்
சக்ரவர்த்தி 9 முறை புதுமாப்பிள்ளை ஆகி விட்டார். இன்னும் நிறைய முறை
மாப்பிள்ளையாக முடிவில் இருந்தார்..
நம்ம போலீஸ் விடலையே.. மாப்பிள்ளையா
இருந்தது போதும்.. வா மாமியார் வீட்டுக்கு என்று அழைத்து சென்றுவிட்டனர்!
சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீசில் புகாருடன்
வந்தார்.
மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்த சக்ரவர்த்தி என்பவர், கல்யாணம்
செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
விசாரணை நடத்த, நடத்ததான், விவகாரம் பெரிசு என்பதை உணர்ந்தனர்.
சக்ரவர்த்தி
புகாருக்கு சொந்தமான சக்ரவர்த்தி என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். எம்.இ
படித்திருக்கிறார். ஆனால் இதைவிட பணத்தை எப்படி குறுக்கு வழியில்
சம்பாதிக்கலாம் என்று யோசித்தார். கல்யாண வயசு வேறு.. அதனால்
மேட்ரிமோனியலில் பதிவு செய்துகொண்டார்.
v
சமத்து பிள்ளை
யாரெல்லாம் வசதியான வீட்டு பெண்களோ அவர்களுக்கு வலை விரித்தார். அதுவும்
டாக்டர். என்ஜியர் பெண்கள்தான் இவருக்கு தேவைப்பட்டது. இதன்மூலம் வரன்
வந்தால், அவர்கள் வீட்டுக்கு செல்வாம்.. பெற்றோரிடம் சமத்து பிள்ளையைபோல
பேசுவாராம். அன்பான மாப்பிள்ளை என்ற பெயரும் கிடைத்துவிடுமாம்.
நெருக்கம்
திருமண தேதி நிச்சயம் ஆன உடனேயே, அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்று
நெருக்கமாக இருப்பாராம். அதன்பிறகு நைசாக பணம் கறக்க ஆரம்பிப்பாராம்..
கையில் பணம் வந்ததும் எஸ்கேப் ஆவதுதான் இவரது பிரதான வேலையே.
திருச்சி சிறை
இப்படி, ஒவ்வொரு ஊரிலும் 9 பேரை ஏமாற்றி பணத்தை கறந்திருக்கிறார்
சக்ரவர்த்தி. மேட்ரிமோனியலில் ஒரு பெயர் இல்லை, அஜய், அருணாச்சலம்,
விஜயகுமார் என இஷ்டத்துக்கும் பெயரை மாற்றி வைத்து கொண்டு இந்த வேலை
பார்த்திருக்கிறார்.
அதாவது 9 பெண்களிடம் 8 கோடி ரூபாயை இதுவரை
ஏமாற்றியுள்ளார். இந்த விஷயமெல்லாம போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து,
சக்ரவர்த்தியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்து விட்டனர்.
அந்த போலீஸ்காரர் கெத்தாக பைக்கில் வந்து இறங்கினார்.. சுற்றிலும் ஒரு
லுக் விட்டார்.. கடைசியில் இப்படி ஒரு கேவலமான வேலையை செஞ்சிட்டு, தன்
பைக்கை எடுத்துட்டு கிளம்பிட்டார்!
சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதி ரொம்ப ஃபேமஸானது. எப்பவுமே பரபரப்பாக
இருக்கும்.
சுற்றுப்புற பகுதி மக்கள் இங்குதான் காய்கறி முதல் எல்லா
பொருட்களையுமே வாங்க வருவார்கள்.
இதனால் கடைகளுக்கு உள்ளே மட்டுமில்லாமல், வெளியேவும்கூட நிறைய
பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இங்குள்ள
கடைகளில் சிசிடிவி காமரா பொருத்தப்பட்டு இருக்கும்.
இங்கு ஆஷிக் என்பவர் பேன்சி கடை வைத்திருக்கிறார். எதேச்சையாக தனது
சிசிவிடி காமிராவை ஆய்வு செய்தார். அதில் கடந்த 19-ம்தேதி கடைக்கு வந்த
ஒருவர் லேடீஸ் ஹேண்ட் பேக்கை திருடுவது கண்டு ஷாக் ஆனார்.
பைக்கில் இருந்து
இறங்கி வரும் அந்த நபர் டிப்-டாப்பாகத்தான் இருக்கிறார்.
கடைக்கு வெளியே சுற்றிலும் ஒரு நோட்டம் விடுகிறார். பிறகு டபால் என ஒரு
ஹேண்ட் பேக் எடுக்கிறார்.
எடுத்துக் கொண்டு போய் தன் பைக்கில்
வைத்துவிட்டார். இதை பார்த்து அதிர்ந்த கடைக்காரர், இவ்வளவு தைரியமாக
திருடுவது யார் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு போலீஸ்காரர்
என்பதும் பெயர் வினோத் என்பதும்!
உடனடியாக போலீஸ் பேக் திருடியதை கடைக்காரர்.
எம்ஜிஆர் நகர் ஸ்டேஷனில் போய்
புகார் சொன்னார், அதுவும் இல்லாமல், இப்படி திருடிய வீடியோவும் இணையத்தில்
ஒரு பக்கம் வைரலாக ஆரம்பித்துவிட்டது. பிரச்சனை விஸ்வரூபம் ஆனதையடுத்து,
சம்பந்தப்பட்ட வினோத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
டிக் டாக் செயலியில் அதிகப்படியான சேலஞ்சுகள் பரவி வருகிறது. கடந்த
சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு என்ற பல
வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகளை டிக் டாக் பயனர்கள் சவாலாகச் செய்து
வந்தனர், தற்பொழுது அதே போன்ற ஒரு சவாலிற்கு 12 வயது சிறுவன் பரிதாபமாகி
பலி ஆக்கியுள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம்
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில்
அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை
சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி
வருகின்றனர்.
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம்
பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்கள் முதல் டிக் டொக் செயலி
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என
அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால்
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது
என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.
டிக் டாக் தடை
இந்தோனேசியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் முன்பே இந்த டிக் டாக் செயலிகள்
தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தடைவிதிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது. பிறகு மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டு டிக் டாக் செயலி
இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது.
12 வயது சிறுவன் செய்த சேலஞ்சு
தற்பொழுது ராஜஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கைகளில் வளையல்
மாட்டிக்கொண்டு தாலியும் கட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு பெரிய இரும்பு
சங்கிலியைக் கட்டிக்கொண்டு டிக் டாக் சேலஞ்சை இரவு முழுதும்
செய்திருக்கிறார் என்று அச்சிறுவனின் தந்தை தெரிவித்திருக்கிறார்.
பிணமாகத் தூக்கில் தொங்கிய சிறுவன்
டிக் டாக் சேலஞ்சு செய்த சிறுவன், பாத்ரூமில் சங்கிலியால் தூக்கில் தொங்கி
இறந்திருக்கிறான். இந்த சம்பவம் இரவில் நடந்ததனால் வீட்டிலிருந்த
யாருக்கும் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை.
காலை விடிந்த உடன்
பெற்றோர்கள் சிறுவனைத் தேட துவங்கிய பொழுது பாத்ரூமில் பிணமாகத் தூக்கில்
தொங்கியவனைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.
டிக் டாக்கினால் விபரீதம்
டிக் டாக் செயலி இல்லாமல் இருந்திருந்தால் என் மகன் இன்று உயிருடன்
இருந்திருப்பான் என்று அந்த சிறுவனின் தந்தை கதறியது அனைவரையும்
உலுக்கியது.
இதேபோல் சென்ற வரம் நாடு துப்பாக்கி வைத்து டிக் டாக் வீடியோ
செய்த இளைஞனும் காய் தவறுதலாகத் தன்னை தானே டிக் டாக் வீடியோ
செய்யும்பொழுது சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தாலும், அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.
பொதுவாக விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில்
சண்டையிடுவது வழக்கம். ஆனால், விஜய்யின் பிறந்தநாளான இன்று, அஜித்தின்
ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்தும், விஜய்
ரசிகர்களை டேக் செய்தும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர்.
விஜய்யின்
பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினாலும், ஒரு பக்கம் என்றும்_தலஅஜித் என்று
அஜித் ரசிகர்கள், அஜித் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து
வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.
முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்
மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரிடையே மண்டை ஓட்டின் பின்புறத்தில் எலும்பு
கொம்பு முளைப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.
மொபைல் தொழில்நுட்பம் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளது - நாம் எவ்வாறு
படிக்கிறோம், வேலை செய்கிறோம், தொடர்புகொள்கிறோம், ஷாப்பிங் செய்கிறோம்
என்பது வரை மாற்றிவிட்டது.
இதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்.
நாம் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நமக்கு முன்னால் உள்ள இந்த
சிறிய இயந்திரம் (செல்போன்) நம் மண்டை எலும்புக்கூடுகளை மறுசீரமைப்பு
செய்கின்றன. இது நமது நடத்தைகளை மட்டுமல்ல, நம் உடலையும் மாற்றக்கூடும்.
எலும்பால் உருவாகும் கொம்பு
பயோமெக்கானிக்ஸில் புதிய ஆராய்ச்சி, இளைஞர்களின் மண்டை ஓட்டின்
பின்புறத்தில் கொம்பு போன்ற கூர்முனைகள் எலும்புகளால் உருவாகி வருவதாகக்
கூறுகிறது.
தலை முன்னோக்கி சாய்வதால் ஏற்படும் எலும்புத் தூண்டுதல்கள்,
முதுகெலும்பிலிருந்து தலையின் பின்புறத்தில் உள்ள தசைகளுக்கு எடையை மாற்றி,
இதுபோன்ற எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மனித வடிவத்தையே மாற்றும் செல்போன்கள்
இதன் விளைவாக ஒரு கொக்கி அல்லது கொம்பு போன்ற அம்சம் மண்டையிலிருந்து
வெளியேறி, கழுத்துக்கு மேலே உருவாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவின்
குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,
வெளியிட்ட ஆய்வறிக்கையில், இளைஞர்களின் எலும்பு வளர்ச்சியின் பரவலானது,
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மாறுகிறது என்று கூறுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள், மனித வடிவத்தையே
சிதைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
5 மிமீ நீளம் கொம்பு
இந்த கண்டுபிடிப்பில், வியக்க வைக்கும் ஒரு பகுதி, எலும்பு கொம்பின் அளவு
பற்றியது. அவை 3 அல்லது 5 மில்லிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளதை எக்ஸ்ரே
ரிப்போர்ட் காட்டுகிறது.
மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம்
இந்த எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது உலகம் சந்திக்கும் அபாயத்தின்
ஒரு துளி என்பதை எடுத்துக் காட்டுகிறது.
வருடங்கள் ஆகும்
"இந்த கொம்பு வடிவங்கள் உருவாக நீண்ட காலம் எடுத்திருக்கலாம். இதன் பொருள்,
அவர்கள் சிறுவயதிலிருந்தே அந்த தலை பகுதியை செல்போன் பார்க்க அதிகம்
பயன்படுத்தியிருக்கலாம்" என்று ஆய்வாளர் ஷாஹர் விளக்கியுள்ளார்.
இன்னும் ஆய்வு தேவை
அதேநேரம், யேல் பல்கலைக்கழகத்தின் உடலியல், மரபியல் மற்றும் நரம்பியல்
அறிவியல் பேராசிரியரான மைக்கேல் நிதாபாச் இந்த கண்டுபிடிப்புகளால்
நம்பப்பவில்லை.
"எக்ஸ்-ரே கதிர்களால், தலை பகுப்பாய்வு செய்யப்பட்ட
எந்தவொரு நபரின் செல்போன் பயன்பாட்டைப் பற்றி முழுமையாக, அறியாமல்,
செல்போன் பயன்பாடு மற்றும் மண்டை ஓடு உருவவியல் ஆகியவற்றுக்கு இடையேயான
தொடர்பு குறித்து முடிவுகளை எடுக்க முடியாது," என்று அவர் கூறினார்.
ஆனாலும், இவரும்கூட, கொம்பு முளைக்க வேறு என்ன காரணம் என அறுதியிட்டு
சொல்லவில்லை. ஆனால் சன்ஷைன் பல்கலைக்கழக ஆய்வாளர்களோ, இது செல்போன்
பயன்படுத்தியதால் உருவான கொம்புகள் என அறிதியிட்டு கூறுகிறார்கள்.