வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெரும்பேர்கண்டிகையில் தி.மு.க. சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | DMK Corona Relief in Perumbergandigai
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 30, 2020

பெரும்பேர்கண்டிகையில் தி.மு.க. சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | DMK Corona Relief in Perumbergandigai

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் 70 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு தி.மு.க சார்பாக அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி தலைமையில் வழங்கப்பட்டது.


கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலைக்கு செல்ல இயலாமல் கடும் பொருளாதார நெருக்கடியிலும், அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருந்த இந்த பகுதியைச் சார்ந்த மக்கள் “ஒன்றிணைவோம் வா” எண்ணிற்கு தொடர்பு கொண்டதன்பேரில் ஒன்றிய செயலாளர் கே.கண்ணன், அவைத்தலைவர் என்.வீரராகவன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஜி.சிவக்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு ஒன்றிய அமைப்பாளர் டி.லட்சுமணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ராம், மாவட்ட பிரதிநிதி ஜெ.பார்த்தசாரதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்.இராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வின்போது, டி.நடராஜ், எல்.இராஜேந்திரன், இ.கார்த்திகேயன், ஜெ.துரைகனேஷ், எம்.சிவனேசன், கே.ஜெகநாதன், எம்.ரவி ஆகிய தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment