செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயினை தூர்வாரி சிறுபாலம் அமைப்பதற்காக நேற்று (22.10.2020)-ல் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அரசுத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொண்டு அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக களையப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment