செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் பிரச்சனைகள் குறித்து மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களாக அளித்துவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் பகுதிகளுக்கே சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்று அந்தந்த மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கைகளை மதுராந்தகம் எம்.எல்.ஏ மேற்கொண்டுவருகிறார்.
அதன்படி, கடந்த 09.11.2020 அன்று தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து தொகுதியின் தேவைகள் தொடர்பான மனுவினை அளித்தார்.
மேலும், தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற பட்டதாரி பெண்ணிற்கு திருமண உதவித் தொகை வழங்க சான்றிதழ் வழங்கினார். பின்னர், எலப்பாக்கம் ஊராட்சி ஈச்சங்காடு பகுதி மக்களின் நிலம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 10.11.2020 அன்று கோரிக்கை மனுவை பெற்று துறைசார்ந்த அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
No comments:
Post a Comment