வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 16, 2018

காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை


தெலங்கானா மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த பெருமாள பிரனாய், சாதியை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி அம்ருதாவின் கண்முன்னே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பெருமாள பிரனாய், கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்று திரும்பிய நேரத்தில் வெள்ளிக்கிழமை மதியம் கழுத்தில் வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது.
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான் 24 வயதான பெருமாள பிரனாய்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
ஆனால், பெருமாள பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்ப்பை மீறி ஹைதராபாத் சென்ற பெருமாள பிரனாயும், அம்ருதாவும், அங்குள்ள ஆரிய சமாஜில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட மாருதி ராவ், பெருமாள பிரனாயை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பிரனாயும், அவரது தாயும் அழைத்து சென்றுள்ளனர்.
பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA PRANAY / FB
பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது, மருத்துவமனையின் வாயிலுக்கருகில் பிரனாய் ராவை கழுத்தில் இருமுறை வெட்டி கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர் அந்த ஆயுதத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சில நேரங்களில் பிரனாயை தாக்க முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நல்கொண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரெங்கநாத் தெரிவிக்கையில், "இதுவொரு ஆணவக்கொலை. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
பிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.படத்தின் காப்புரிமைUGC
Image captionபிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.

அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷிவானும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை நடத்தியிருக்கலாம் என்று காவல் துறை சந்தேகப்படுகிறது.
"மாருதி ராவ் கோடீஸ்வரர். அவர் தொந்தரவு அளிக்கலாம். எனவே, இருவக்கும் திருமணமானவுடன், வேறிடத்திற்கு சென்றுவிட மகனையும், மருமகளையும் வற்புறுத்தினேன். தனது தந்தையின் கோபத்தை தானே தணித்து விடுவேன் என்றும் அம்ருதா கூறிவிட்டார்" என்று பிரனாயின் தந்தை பாலசாமி பிபிசியிடம் தெரிவித்தார்,
"திருமணத்திற்கு பிறகு அவர்கள் எனது மகனை கொல்ல திட்டமிட்டிருந்தனர். பிரானயும் எச்சரிக்கையுடன்தான் இருந்தார். ஆனாலும், இந்த கொடிய சம்பவம் நடத்துவிட்டது" என்று அவர் கூறினார்.
அம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்படத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
Image captionஅம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை ஐ.ஜியிடம் இந்த ஜோடி முன்னதாக கேட்டுள்ளது.

இந்த விடயத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுரைக்கு கீழ்படிவதாக மாருதி ராவ் வாக்குறுதியும் அளித்துள்ளார்.
பின்னர், அம்ருதாவின் பெற்றோர் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இவ்வாறு தாங்களின் கோபம் சற்று தணிவடைந்து விட்டதுபோல் காட்டி இந்த கொலையை செய்துள்ளதாக கருதப்படுகிறது.
மாருதி ராவின் தம்பி ஷிவான்படத்தின் காப்புரிமைNALGONDA POLICE / FB
Image captionமாருதி ராவின் தம்பி ஷிவான்
இது தொடர்பான வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் முதல் குற்றவாளியாகவும், அவரது தம்பி ஷிவான் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மாருதி ராவ், ஷிவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலித் அமைப்புகள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

No comments:

Post a Comment