வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உலகம் அழியப்போகிறதா - நாசா எச்சரிக்கை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

உலகம் அழியப்போகிறதா - நாசா எச்சரிக்கை..!



சமீபத்தில் சூரிய காற்றால் செவ்வாய் கிரகத்தின் வளமைகள் முற்றிலுமாக அழிந்து போன தகவலை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த தகவலில் செவ்வாய் கிரகத்தை போன்றே பூமி கிரகமும் அழிந்து போகாமல் பாதுகாப்பது பூமியின் காந்த புலம் (Magnetic Field) தான் என்று நாசா விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.


ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகின் காந்த புலம் பற்றியும், உலகின் துருவங்கள் பற்றியும் அதிர்ச்சிகாரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது நாசா. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

பலவீனம் :

நாசாவின் ஆய்வுப்படி உலகின் காந்த புலம் (Magnetic Field) பலவீனம் அடைந்து கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.
 

தலைகீழாக மாறும் ஆபாயம் :

மேலும், இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் (அதாவது வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள்) தலைகீழாக மாறும் ஆபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரிததுள்ளது.
 

எடுத்துக்காட்டு :

அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும், எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும்.
 

பேரழிவு :

மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியண்டர்தால் :

குறிப்பிட்ட சில ஆய்வாளர்கள் தலைகீழாக மாறும் துருவங்கள் விபரீதமான சம்பவம் தான் பேரழிவை ஏற்படுத்தி நியண்டர்தால் (Neanderthal) மனித இனத்தையே அழித்தது என்ற தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

ஆதாரங்கள் :

நாசாவின் மேவன் (MAVEN - Mars Atmosphere and Volatile Evolution) விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனம் அடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

160 வருடம் :

திரட்டப்பட்ட ஆதாரங்கள் மூலம் பூமியின் காந்த புலம் கடந்த 160 வருடங்களாக பலவீனம் அடைந்து கொண்டே வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
 

1000 ஆண்டுகளில் நடக்கும் :

காந்த புலம் சமப்படுத்துதல் மற்றும் காந்த முனைகள் தலைகீழாக புரட்டப்படும் சம்பவமானது, இன்னும் 1000 ஆண்டுகளில் நடக்கும், முக்கியமாக அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நடக்கும் என்று நாசா கணித்துள்ளது.
 

மறுசீரமைப்பு :

காந்த புலத்தின் பலவீனம் ஆனது பூமியின் திரவ வெளி மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும் அதன் விளைவாக துருவங்கள் மாறும்.


மெல்ல மெல்ல :

மேலும் சில ஆய்வாளர்களின் ஆய்வின்படி உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக புரட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

200 ஆண்டுகள் :

அது மட்டுமின்றி உலக துருவாங்கள் தலைகீழாக மாறிய அடுத்த 200 ஆண்டுகளுக்கு பூமிக்கு காந்த புலமே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது

பாதிப்பு :

வளிமண்டலத்தில் கடந்து சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான், அது பலவீனம் அடைந்தால் பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகும்.
 

தீங்கு :

அப்படியாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு, சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்க நேரிடும்.
 

இடையூறு :

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவத்தின் மூலம் தோல் புற்றுநோய் மற்றும் ஆற்றல் மற்றும் தொடர்புத் இடையூறு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

நம்பிக்கை :

சுமார் 780,000 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்து தான் பூமியின் துருவங்கள் புரட்டப்பட்டுள்ளது என்றும் சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
 

பனியுகம் :

மேலும் 41,000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தில் (Ice Age) நடந்த இதே போன்ற சம்பவம் தான் நியண்டர்தால் இனத்தையே அழித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment