வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, September 10, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்குவாரிக்கு எதிராக ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறுகட்ட போராட்டங்கள் மற்றும் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கல்குவாரி மூலம் இயக்கப்படும் கனரக வாகனங்களின் காரணமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்பதால் கனரக வாகனங்களை நிறுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நேற்று 09.09.2019, வட்டார போக்குவரத்து அலுவலர் (R.T.O), கோட்டாட்சியர் (R.D.O), வட்டாட்சியர் (Tahsildar), காவல்துறை ஆய்வாளர் (Inspector of Police), வட்டார வளர்ச்சி அலுவலர்(B.D.O) என பல்வேறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment