வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் பேரூர் 13-வது வார்டில் 150 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் | Corona Relief given by DMK at Acharapakkam 13th Ward
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 15, 2020

அச்சிறுபாக்கம் பேரூர் 13-வது வார்டில் 150 குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் | Corona Relief given by DMK at Acharapakkam 13th Ward


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.13, பஜனை கோயில் தெரு பகுதியில் வசிக்கும் 150 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி தி.மு.க செயலாளர் எஸ்.உசேன் தலைமையில், கழக முன்னோடி ஆசிரியர்.தருமன் முன்னிலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால் கடும் பாதிப்பில் உள்ள இப்பகுதி மக்களுக்கு தி.மு.க. சார்பாக அச்சிறுபாக்கம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பார் டி.மோகனகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை வார்டின் முக்கிய பகுதியில் துவங்கி பின்னர் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி ஏ.ஆர்.ஏழுமலை, அவைத்தலைவர் சையத் முகமது, பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.பட்டாபி, பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம், ஒன்றிய துணைச் செயலாளர் கோகுலம் இரமேஷ், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் முகமது கனி உள்ளிட்ட சில தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment