செங்கல்பட்டு
மாவட்டம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சியில்
கொரொனா ஊரடங்கு நேரத்திலும் இரவு
பகல் பாராமல் அயராது தூய்மை
பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும்
காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர்
திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆணைக்கிணங்க,
அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள்
உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை விட்டிலாபுரம்
ஊராட்சி அதிமுக பொறுப்பாளர் வெ.மகேந்திரன் வழங்கினார்.
சமூக இடைவெளியை கடைபிடித்து அனைவரும் பொருட்களை வாங்கி சென்றனர். இந்த
நிகழ்ச்சியில் விட்டிலாபுரம் ஊராட்சி அதிமுக கிளை
செயலாளர் ஆ.சேகர் மற்றும்
ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment