வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கொரோனா மருந்து ரெடி | Vil Ambu News|
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 20, 2020

கொரோனா மருந்து ரெடி | Vil Ambu News|

முதல் முறையாக இந்தியா கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருந்தை அனுமதிக்கச் சோதனை தொடக்கம்...
நாட்டில் மத்திய அரசு அனுமதி பெற்ற ஃபேபிஃபுளு என்ற மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக நாட்டில் அங்கிகாரம் பெற்ற முதல் மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ளன்மார்க் பார்மெசிட்டிகள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஃபேபிபிராவிர் என்ற மருந்தை ஃபேபிஃபுளு என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தைக் கொண்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகிக் குறைந்த அறிகுறிகளோடு காணப்படுபவர்களைக் குணப்படுத்தி விடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே இந்த மருந்தை நாட்டில் தயாரிக்கவும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க இந்த நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தளபதியிடம் அனுமதி பெற்றது.


குறிப்பிட்ட நிறுவனத்தின் முதன்மை அதிகாரி க்ளென் சாலதான்ஹா நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வரும் இந்த சூழலில் எங்கள் நிறுவனம் இந்த மருந்தை விநியோகிக்க அனுமதி கிடைத்துள்ளது. இப்போதைய நிலை நாட்டின் சுகாதார கட்டமைப்பைக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நேரத்தில் எங்கள் மருந்து நிச்சயம் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிக்கும்என்றார்.

மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஃபேபிபிராவிர் மருந்துக்கான நேரடி சோதனைக்கு அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு லேசான அறிகுறிகளோடு காணப்படுவார்களுக்கு இந்த மருந்தைக் குறிப்பிட்ட அளவில் கொடுத்து சோதனை தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளது.


முதற்கட்டமாக நாட்டில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தலா 150 நோயாளிகளைத் தேர்வு செய்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment