கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் ரீதாபுரம் பேரூர் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார்.
நேற்றிரவு சுமார் 8 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய குமார் சங்கரை அங்கு பதுங்கியிருந்த மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் குமார்சங்கர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகள்
No comments:
Post a Comment