மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போதும், சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை TN58 N2399 என்ற பதிவெண் கொண்ட அரசுப்பேருந்து 50 பயணிகளுடன் கொடைக்கானலுக்கு சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆறுமுகம் இயக்கிக்கொண்டிருந்தார். பேருந்து மதுரை காளவாசலை கடந்து சென்றுக்கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வலியால் துடித்த ஓட்டுநர் ஆறுமுகம் சாலையில் எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திய நிலையில் அவரது உயிர் அங்கேயே பிரிந்தது. இதன்காரணமாக பேருந்து விபத்தில் சிக்காமல் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment