வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Anaikunnam Village News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Anaikunnam Village News. Show all posts
Showing posts with label Anaikunnam Village News. Show all posts

Tuesday, April 07, 2020

ஆனைக்குன்னம் இளைஞர்கள் வழங்கிய கபசூரண குடிநீர் | Kabasurana Kudineer given by Anaikunnam Youth


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் 06.04.2020 அன்று இளைஞர்கள் மூலமாக கபசூரண குடிநீர் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.


 
ஒரு நபருக்கு சுமார் 20 முதல் 50 மி.லி கபசூரண குடிநீரை வயதிற்கேற்ப பிரித்து வழங்கினர். 
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மேற்கொண்டதை பொதுமக்கள் பாராட்டினர். 
 

 


Thursday, October 03, 2019

ஆனைக்குன்றத்தில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் அரசிடமே ஒப்படைக்கப்பட்டதா...? Anaikunnam Village Issue

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் நேற்று (02.10.2019) அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தினை கிராம பொதுமக்கள் புறக்கணிக்க நேரிட்டனர்.




ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியினை மூடக்கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறுகட்ட போராட்டங்களும், கிராம சபை கூட்டங்கள் புறக்கணிப்பும் கடந்த 1 ஆண்டு காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி 2019 (16.09.2019) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கல்குவாரியினை மூடக்கோரி ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டது என்னவெனில் "ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியினை அரசு தலையிட்டு உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் வரும் 02.10.2019 அன்று கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவை அரசாங்கத்திடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்பதே"

இதனையடுத்து நேற்று (02.10.2019) நடைபெற்ற காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டத்தினை புறக்கணித்து அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் கிராம சபை கூட்டத்திற்கு வருகை புரிந்த அரசு அதிகாரிகள் யாரும் அடையாள அட்டைகளை திரும்ப பெறாத நிலையில் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானபடுத்தி வாக்குறுதி அளித்தார். ஆனால் அடையாள அட்டைகளை வாங்க மறுத்துவிட்டார்.  

மேற்படி வாக்குறுதியில் வருகின்ற (04.10.2019) அன்று மதுராந்தகம் வட்டாட்சியர் முன்னிலையில் கிராம மக்கள் மற்றும் கல்குவாரியினை சார்ந்த நபர்களிடம் ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு இல்லாமல் அமைதி காத்தனர்.

நாளை (04.10.2019) அன்று வட்டாட்சியர் நடத்தும் ஆலோசனை யாருக்கு சாதகமாக அமையும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.


ஆனைக்குன்னம் கிராம கல்குவாரி சம்மந்தமான பிற செய்திகள் :
16/09/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead

10/09/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village

17/08/2019 : ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue



Monday, September 16, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் குவாரிக்கு எதிரான போராட்டம் தீவிரம் | பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளை அரசாங்கத்திடமே ஒப்படைக்க முடிவு | Anaikunnam Quarrying of Stone Problem ahead

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிரான போரட்டம் அடுத்தகட்டத்தினை எட்டியுள்ளது.




பல ஆண்டுகளாக கல்குவாரியினை எதிர்த்து போராட்டம் மற்றும் கிராமசபை கூட்ட புறக்கணிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த பொதுமக்கள் தற்போது தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற மத்திய, மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்து விதமான அடையாள அட்டைகளையும் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் அரசாங்கத்திடமே ஒப்படைக்க உள்ளதாக இன்று 16.09.2019 அன்று மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

ஏற்கனவே பலமுறை பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளிடமும், கனிமவள உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மேற்படி குவாரிக்கு எதிரான புகார் மனுவினை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த புகார் சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் சார்பாகவே வழக்கும் தொடரப்பட்டு விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்களிடம் நேரடியாக இன்று கொடுக்கப்பட்ட மனுவாகும்.

Tuesday, September 10, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டுவரும் கல்குவாரியை எதிர்த்து அடுத்தகட்ட நடவடிக்கை | The Next Step to oppose the Quarrying of Stone at Anaikunnam Village

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்குவாரிக்கு எதிராக ஆனைக்குன்னம் கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சில ஆண்டுகளாக பல்வேறுகட்ட போராட்டங்கள் மற்றும் கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கல்குவாரி மூலம் இயக்கப்படும் கனரக வாகனங்களின் காரணமாக பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாலும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என்பதால் கனரக வாகனங்களை நிறுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நேற்று 09.09.2019, வட்டார போக்குவரத்து அலுவலர் (R.T.O), கோட்டாட்சியர் (R.D.O), வட்டாட்சியர் (Tahsildar), காவல்துறை ஆய்வாளர் (Inspector of Police), வட்டார வளர்ச்சி அலுவலர்(B.D.O) என பல்வேறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பில் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

Saturday, August 17, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue | Run World Media

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் ஊராட்சியில் சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கிராம பொது மக்களால் கிராம சபை கூட்டமானது புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.


மேற்கண்ட புறக்கணிப்பு போராட்டத்திற்கு காரணம் என்னவெனில் "ஆனைக்குன்னம் ஊராட்சியில் கல்குவாரி வரப்போகிறது" என்பதை அறிந்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-2017 மற்றும் 2017-2018, 2018-2019 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொது மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படி இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத ஊரக வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டு  போராட்டம் நடைபெற்றது.

மேற்படி ஆனைக்குன்னம் கிராமத்தில் தற்போது கல்குவாரி உள்ள பகுதிக்கு அருகே தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்குவாரியின் வழியேதான் எலப்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் செல்வதில் மிகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கல்குவாரியின் அதிக சப்தம் மற்றும் சிதறல்களின் காரணமாக ஆனைக்குன்னம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் "மான், மயில்" போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அழிந்து கொண்டே வருகிறது.

எனவே, இந்த "கல்குவாரியினை சீல் வைத்து பொதுமக்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துமா இந்த அரசு...?" என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.