வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Crime News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Crime News. Show all posts
Showing posts with label Crime News. Show all posts

Wednesday, January 19, 2022

காதலியை முதுகில் குத்திய காதலன்..! போலீசார் முன்பே வெறிச்செயல்.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே இருவருக்கும் பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து காதலி வீட்டிற்கு நேரில் சென்ற பிரகாஷ் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரையும் விசாரணைக்கு நேரில் அழைத்துள்ளனர். அப்போது தன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இருந்த காதலன் பிரகாஷ் காவல்நிலைய வளாகத்திலேயே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியின் முதுகில் குத்தியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

குற்றச் செய்திகள் 


முந்தைய குற்றச் செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 03, 2018

விஜய் மல்லையாவின் உல்லாச படகு விற்பனை…!



பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன்வாங்கி விட்டு, லண்டனுக்கு ஓடியவர், பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கை லண்டன் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.


இதனிடையே மல்லையாவின் பல்வேறு சொத்துக்களை முடக்கி வைத்தும், சிலவற்றை விற்றும் கடனை சரிக்கட்டும் நடவடிக்கைகளில் இந்திய வங்கிகளும், அமலாக்கத்துறையும் ஈடுபட்டு வருகின்றன.
அதனொரு பகுதியாக, மால்டா தீவில் கைப்பற்றப்பட்ட, விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று, மால்டா நீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கூறியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts