வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Kancheepuram School Girl Rape News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Kancheepuram School Girl Rape News. Show all posts
Showing posts with label Kancheepuram School Girl Rape News. Show all posts

Tuesday, April 02, 2019

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்... ஆட்டோ ஓட்டுநர்கள் வெறிச்செயல்

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 


ஒரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். காஞ்சிபுரம் அருகே விஷ்ணு காஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தனியாக அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது சிறுமி விரும்பி சென்ற கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர், வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார். 

இதனை நம்பி அச்சிறுமி, அவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை வரவழைத்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தேவா மற்றும் ராஜா ஆகிய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.