வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 16 age girl rape news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label 16 age girl rape news. Show all posts
Showing posts with label 16 age girl rape news. Show all posts

Thursday, December 16, 2021

ச்ச்சீ மனுஷனா இவன்.. பெற்ற மகளையே கற்பமாக்கிய கொடூர தந்தை.!! டி.என்.ஏ பரிசோதனையில் அம்பலம்..!

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த திருமணமாகாத 16 வயது சிறுமிக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.


இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியும், சிறுமியின் தந்தையான சாமியாரும் சேர்ந்து தேவதானப்பட்டி அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பையன் ஒருவர்தான் இந்த குழந்தைக்கு தந்தை என்று கூறி அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் உறவுக்கார பையனை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனையடுத்து அந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என்று கூறிய அந்த இளைஞர், டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அந்த இளைஞர், சிறுமி மற்றும் பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் அந்த குழந்தை இளைஞருக்கு பிறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் தந்தை மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது டி.என்.ஏ.வை பரிசோதனை செய்தபோது அவர்தான் குழந்தைக்கு உண்மையான தந்தை என்பதும், தன் மகளுடன் பெற்ற தந்தையே பாலியல் உறவு கொண்டு தாயாக்கியதுடன் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று கருதி உறவுக்காரப் பையன் மீது பழியைப் போட்டு அவரை சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த தந்தையை கைது செய்த தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் சிறையில் அடைத்தனர். அந்த சிறுமியையும், சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Tuesday, April 02, 2019

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்... ஆட்டோ ஓட்டுநர்கள் வெறிச்செயல்

காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 


ஒரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். காஞ்சிபுரம் அருகே விஷ்ணு காஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தனியாக அந்த பகுதியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது சிறுமி விரும்பி சென்ற கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. சிறுமியை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநர், வேறு கோயிலுக்கு அழைத்து செல்வதாக சிறுமியிடம் நைசாக பேசியுள்ளார். 

இதனை நம்பி அச்சிறுமி, அவருடைய ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள காலியிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களான இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை வரவழைத்துள்ளார். அவர்கள் மூன்று பேரும் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தேவா மற்றும் ராஜா ஆகிய இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகிறார்கள். கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.