வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: T M Anbarasan Minster
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label T M Anbarasan Minster. Show all posts
Showing posts with label T M Anbarasan Minster. Show all posts

Saturday, January 22, 2022

செங்கை, காஞ்சியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பாக சுமார் 7000 பேர் விருப்பமனு - அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளுக்கும் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி தாம்பரம், பம்மல், கூடுவாஞ்சேரி மாங்காடு, குன்றத்தூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றன.


இதில் மாநகராட்சி பகுதியில் போட்டியிட ரூ. 10 ஆயிரமும், நகராட்சி பகுதியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் படப்பை ஆ. மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் தி. க. பாஸ்கரன் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். இதயவர்மன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டி. எஸ். எம். ஜெயகரன், குன்றத்தூர் நகராட்சிக்கு தொமுச பேரவை செயலாளர் இரா. பொன்னுரங்கம், மாங்காடு நகராட்சியில் பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நா. கோபால், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பையனூர் சேகர் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் சுமார் 7 ஆயிரம் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்:

திமுக சார்பில், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குபோட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.

காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தா. மோ. அன்பரசன், ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். காலை தொடங்கி முற்பகல் வரை நேர்காணல் நீடித்தது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 16, 2021

அச்சிறுபாக்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Minister TM Anbarasan Acharapakkam Camp Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 59 ஊராட்சிகளிலிருந்தும் வருகைபுரிந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். 


மேலும், வீடு வழங்கும் திட்டம், கர்பிணி பெண்களுக்கான நல உதவிகள் வழங்குதல், ஊனமுற்றோருக்கான நலத்திட்டம் வழங்குதல் என பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள்  மற்றும் ஆணைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார். 


உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாலருமான க.சுந்தர், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இ.ஆ.ப ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



இந்த முகாமில் வேளாண் துறை சார்பாக மின் தெளிப்பான், விதைப்பான், மரம் ஏறும் கருவி உள்ளிட்ட நவீன விவசாய கருவிகளும், மரக்கன்றுகள், விதைகள் உள்ளிட்டவைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளி கல்வித்துறை சார்பாக ஊனமுற்ற மாணவருக்கான  சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.



நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழுத் தலைவர் கே.கண்ணன், ஒன்றிய குழு துணைத்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில் தி.மு.க- ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்பட்ட 13523 மனுக்களில் 3150 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், மீதுமுள்ள மனுக்களில் 575 மனுக்கள் பரிசீலினையில் உள்ளன எனவும் தெரிவித்தார். 


மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் பட்டா கோருபவர்களின் மனு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களும் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவத்தார்.


இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ்,  மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தா கோகுலக்கண்ணன், மாலதி, ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய,  ஊராட்சி அளவிலான பல தி.மு.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் சுகாதார துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகளை கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வின் போது கூட்டத்தில் இருந்த நரிக்குறவர் பெண் ஒருவர் எனக்கும் நலத்திட்ட உதவிகள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கையை வைத்து பின்னர் மணி மாலையை அமைச்சர் உள்ளிட்ட மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு அணிவித்தது குறிப்பிடத்தக்கது. 




டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்