வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Technology News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Technology News. Show all posts
Showing posts with label Technology News. Show all posts

Thursday, December 09, 2021

200 மில்லியன் சந்தாதாரர்களை கடந்த உலகின் முதல் யூடியூப் சேனல்! | World Hight YouTube Subscriber Channel | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

இசையில் தொடங்கி சமையல் வரை எல்லா வடிவத்திலும் யூடியுப் சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி இயங்கும் சேனல்களில் அதிக சந்தாதாரர்களை கொண்டிருக்கும் சேனல்களுக்கு யூடியுப் பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.


அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த சினிமா மற்றும் இசை வெளியீட்டு நிறுவனமான 'T Series' யூடியுப் சேனல் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற உலகின் முதல் யூடியுப் சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டு T Series நிறுவனம் யூடியுப் சேனலை தொடங்கியது.


இந்த 15 ஆண்டுகளில் 383 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 29 சேனல்கள் உள்ளன. இதனால் ரூ. 72 கோடி வரை மாத வருமானம் ஈட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்திய செய்திகள் 

Tuesday, April 20, 2021

உஷார்..! உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் செய்யப்படலாம்… உடனே இதைச் செய்யுங்க! | Whatsapp Dangerous message to lock | Vil Ambu News | Tamil Latest News

New whatsapp vulnerability தாக்குபவர் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையத் தொடங்கலாம்.

புதிய வாட்ஸ்அப் செய்தி, உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துவதைத் தொலைதூர இடைநீக்கம் செய்யத் தாக்குபவர்களை அனுமதிக்கிறது என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு ஆய்வாளர்களான லூயிஸ் மார்க்வெஸ் கார்பின்டெரோ மற்றும் எர்னஸ்டோ கேனலேஸ் பெரேனா ஆகியோரின் ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புதிய பாதிப்பு, உடனடி செய்தி பயன்பாட்டில் நீண்ட காலமாக இருந்ததாகத் தெரிகிறது. மேலும், உங்களிடம் இரு-காரணி அங்கீகாரம் இருந்தாலும், உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்துவதைத் தடுக்க தாக்குபவர்களை இது அனுமதிக்கிறது.

இரண்டு அடிப்படை பலவீனங்களால் இந்த பாதிப்பு நிலவுகிறது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. முதல் பலவீனம், தாக்குதல் செய்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் நிறுவலில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட அனுமதிக்கிறது. தாக்குபவர் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையத் தொடங்கலாம்.

உங்கள் கணக்கிற்கு அனுப்பப்பட்ட ஆறு இலக்க பாதுகாப்புக் குறியீட்டை எஸ்.எம்.எஸ்-ஆக பெறமாட்டார் என்றாலும், அவர் தவறான பாதுகாப்பு குறியீட்டை மீண்டும் மீண்டும் உள்ளிடலாம். இது உங்கள் கணக்கை புதிய நிறுவல்களை 12 மணி நேரம் பூட்ட வழிவகுக்கும்.

இதற்கிடையில், தாக்குபவர் இரண்டாவது அடிப்படை பலவீனத்தைப் பயன்படுத்த முடியும் மற்றும் வாட்ஸ்அப்பின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளலாம். அங்கு அவர்கள் உங்கள் எண்ணை நிரந்தரமாக செயலிழக்கச் செய்யுமாறு கேட்கலாம். உங்கள் எண் உண்மையில் அவருடைய எண் என்பதை வாட்ஸ்அப்பை நம்ப வைக்க அனைத்து தாக்குபவர்களும் செய்ய வேண்டியது அவர்களின் ‘தொலைபேசி தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுள்ளது’ எனக்கூறி ஒரு புதிய மின்னஞ்சல் ஐடியிலிருந்து ஒரு மின்னஞ்சலை எழுதுவதுதான்.

இது என்ன செய்கிறது?

இந்த பின்னடைவுகளைப் பயன்படுத்தி, தாக்குபவர் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை மிகவும் எளிதாக செயலிழக்கச் செய்ய முடியும். உங்கள் கணக்கு, வழக்கமான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்ப்பதன் மூலம் நீங்கள் எப்போதும் செயலிழக்கச் செய்யலாம். இருப்பினும், மேலே குறிப்பிட்ட படிகளைப் பின்பற்றிப் பல உள்நுழைவு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அந்த முறை செயல்படாது. இது தடுக்கப்படுவதற்கான முயற்சிகளில் புதிய உள்நுழைவுக்கு வழிவகுக்கும். ஒரு கணக்கை மீண்டும் மீண்டும் மீட்டமைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் வாட்ஸ்அப் ஒரு பயனரை லாக் செய்கிறது.

இந்த பின்னடைவு தாக்குதல் பயன்படுத்தப்பட்டவுடன், உங்கள் உள்நுழைவு முயற்சிகள், அணுகலைப் பெற முயற்சிக்கும் மூன்றாம் தரப்பினராகக் கண்டறியப்படும்.

அத்தகைய தாக்குதலைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய முடியும்?

Indianexpress.com-க்கு வழங்கப்பட்ட அறிக்கையில், வாட்ஸ்அப் “உங்கள் இரண்டு-படி சரிபார்ப்புடன் ஒரு மின்னஞ்சல் முகவரியை வழங்குவது, எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு மக்களுக்கு இந்த சாத்தியமான சிக்கலை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு உதவுகிறது. இந்த ஆராய்ச்சியாளரால் அடையாளம் காணப்பட்ட சூழ்நிலைகள் எங்கள் சேவை விதிமுறைகளை மீறும். மேலும், எங்கள் ஆதரவு குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்ப உதவி தேவைப்படும் எவரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதனால் விசாரிக்க முடியும்” என்று கூறியிருந்தது.

பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை தங்கள் மின்னஞ்சல் ஐடியுடன் பிணைப்பதன் மூலம் இந்த தாக்குதல் முறையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை செயல்முறை குறிக்கிறது. இருப்பினும், இந்த பின்னடைவுகளை சரிசெய்ய நிறுவனம் செயல்படும் என்பதை வாட்ஸ்அப் இன்னும் குறிப்பிடவில்லை. அதுவரை, உங்கள் கணக்கில் மின்னஞ்சல் ஐடியை இணைப்பது நல்லது.


Saturday, May 25, 2019

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழக உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 தமிழகத்தை பொறுத்த வரை 1.75 லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 1,20,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 509 கல்லூரிகளில், 502 கல்லூரிகள் அண்ணா பல்கலை கழகத்திடம் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை ஒப்படைத்துள்ளன. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, ஒவ்வொரு கல்லூரிகளிலும் 65 சதவீதம் வரை அரசு இடஒதுக்கீட்டில் அளிக்கப்படுவதாக கூறினார்.

 அரசு இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும் என்றார். அரசு இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

அரசு வழங்கும் இடஒதுக்கீட்டு இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளதால், மாணவர்கள் முறையாக விண்ணப்பித்து பலன் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை தெரிவிக்க, கூடுதல் இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 உயர்கல்வித்துறையின் எச்சரிக்கையையும் மீறி கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம் மாணவர்களிடமிருந்து வாங்குவதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இன்ஸ்டகிராம்ல சாவுனு கமெண்ட் போட்டதுக்காக தற்கொலை செய்துகொண்ட பெண்... என்னதான் ஆச்சு?

இந்த நவீன காலத்தில் சோஷியல் மீடியாவை பயன்படுத்தாத நபர்களை பார்க்க முடியாது. அந்தளவுக்கு அதன் மீது மோகம் கூடிக் கொண்டு தான் வருகிறது. நிறைய லைக்ஸ்களை வாங்கி விட வேண்டும் மக்களின் பார்வையை நம் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எதை எதையோ
இவர்கள் பண்ற சில்லி திங்க்ஸூம் எல்லோராலும் பேசப்படுவது தான் வேதனைக்குரியது.
 இன்ஸ்ட்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா மக்களின் பயன்பாட்டிற்கு என்று இல்லாமல் மக்களை பைத்தியாக்கும் அளவுக்கு அதன் பிடியில் வைத்துள்ளது. அப்படித்தான் ஒரு பெண் செய்ஞ்ச பைத்தியக்காரத்தனத்த பாருங்க.

தற்கொலைக்கு வாக்கெடுத்த ட்வீட்

அந்த பெண் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தான் தற்கொலை செய்யலாமா வேண்டாமா என்பது போன்ற கருத்தை மக்களிடம் கேட்டு ஒரு ட்வீட்டை பதிவிட்டு உள்ளார். மக்களின் வாக்கெடுப்பில் கிடைத்த பரிசு அந்த பெண் கொஞ்சம் கூட யோசிக்காமல் மலேசியாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

சோகமான செய்தி

இன்ஸ்ட்டாகிராமில் அந்த பெண் பதிவிட்ட செய்தி இது தான். முக்கியமான பதிவு : எனக்கு உதவுங்களே, தேர்ந்தெடுங்கள் : D( இறப்பு), L (வாழ்வு ). என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
" நீங்கள் சொல்வதை பொருத்து நான் என் வாழ்க்கையை முடித்து கொள்ளப் போகிறேன்" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த போஸ்ட்டை பார்த்த மக்கள் இதை ஒரு பொய் வதந்தியாக இருக்கும் என்று நினைத்துள்ளனர்.

 இதனால் அவர்கள் அதை ஜோக்காகவும், விளையாட்டுத்தனமாகவும் நினைத்து பதில் அளித்துள்ளனர்.அவர்கள் அளித்த பதிலே அந்த பெண்ணின் வாழ்க்கையை முடித்து விட்டது. 69% மக்கள் இறப்பு என்று பதிவிட்டதால் அதை சீரியஸாக எடுத்து தற்கொலை செய்து கொண்டாள்.

தற்கொலை செய்ய காரணம்

அவருடைய வளர்ப்பு தந்தை சிங்கப்பூரில் ஒரு வியட்நாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக மனம் நொந்த நிலையில் இருந்ததால் இந்த போஸ்ட்டை போட்டுள்ளார். ஆனால் இதை அறியாத மக்களின் கருத்தால் பாவம் அவர் உயிர் போய் விட்டது. அந்த பெண்ணும் இதற்காக தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

விழிப்புணர்வு

சோஷியல் மீடியா என்பதை மக்கள் நல்ல பயன்பாட்டிற்கு பயன்படுத்துங்கள். அதை விடுத்து மற்றவர்களை ஈர்க்கும் நோக்கத்திலயே லைக்ஸ்களை அள்ள வேண்ட எண்ணியோ பயன்படுத்தினால் இந்த மாதிரியான விபரீத முடிவு தான் எழும்.
உங்களுடைய பெர்சனல் பிரச்சினைகளை எல்லோரும் பார்க்கும் வண்ணம் கொண்டு செல்வது முற்றிலும் தவறான செயலும் கூட. பொய்யோ மெய்யோ இந்த மாதிரியான கிறுக்குத்தனமான பதிவிட்டுக்கு மக்களும் நேர்மறை பதில்களை கூறுவதே சிறந்தது. நீங்கள் L (வாழ்வு ) என்று பதிவிட்டு இருந்தால் தற்போது எங்கயோ இருக்கும் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒன்னு பாசிடிவ் பதிவிடுங்கள்.

 இல்லையென்றால் எல்லோரும் அதை தவிர்த்திடுங்கள். அந்த பெண் மாதிரி முட்டாள்தனமான முடிவை எடுப்பதற்கு முன் எல்லோரும் யோசியுங்கள். இப்படி கேட்பதற்கு அந்த பெண் தனக்குரிய பிரச்சினைகளை சொல்லியே தீர்வு கேட்டு இருக்கலாம். சோஷியல் மீடியா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம் அவ்வளவு தான்


Thursday, May 23, 2019

ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.!

தற்சமயம் புதிய தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்தி வந்த வண்ணம் உள்ளது.



இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர்களில் 60சதவிகதிம் முதல் 70சதவிகிதம் வரையிலான மக்கள் ட்ரூகாலர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன்ற செய்யும் நபர் யார், என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ட்ரூகாலர் நிறுவனம்
பின்பு மக்கள் இதற்கு அளித்த ஆதரவை கண்ட ட்ரூகாலர் நிறுவனம், மேலும் சில அப்டேட்களை செய்தது, அதன்படி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும் ட்ரூகாலர் அறிமுகப்படுத்தியது.


பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர் 
 இந்த அப்ளிகேஷன் மூலம் பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெயர் அறிய முடியாத சில சைபர் செக்யுரிட்டி கண்காணிப்பாளர்கள் ட்ரூகாலர் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை கவனித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


விற்பனை
மேலும் அதிக அளவில் பணப்பரிவர்ததனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண், இ-மெயில் ஐடி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள மோசடி கும்பல்களிடமும் இணையதள பிரோக்கர்களிடமும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத் தகவல்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது 
 ஆனால் இந்த தகவல்களை ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது, தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதவும் ஹேக்கர்களார் திருடப்படவில்லை என்றும் அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பின்பு பணப்பரிவர்தனை செய்யும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறியுள்ளது.

Sunday, May 05, 2019

அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக காவல் துறை - ஆர்பரிக்கும் பொதுமக்கள் : இனி உங்கள் வீடுகளை 24 மணி நேரமும் நேரடியாகவே கண்காணிக்கும் போலீஸ்..!


திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகள், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் தொடர் இணைப்பின் மூலமாக திருச்சி மாநகரம் முழுவதையும் இணைத்து திருச்சி மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மெகா திரையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி மாநகரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து பகுதிகளையும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி விட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.

Sunday, January 20, 2019

காரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.! ஹேக்கர் ஹண்ட் ஆன்.!



டெஸ்லா கார் நிறுவனம் உலக ஹேக்கர்களுக்கு புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி டெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் 1.10 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பின்படி சுமார் ரூ. 7 கோடி பரிசு வழங்கப்படுமென்று டெஸ்லா நிறுவனம் உறுதியளித்துள்ளது. 



அத்துடன் டெஸ்லா காரின் மென்பொருளை ஆராய்ந்து, அதில் உள்ள பக்-கை கண்டுபிடிக்கும் முதல் ஹேக்கர் பொறியாளருக்கு புத்தம் புதிய டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படுமென்றும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எலெக்ட்ரிக் கார் 
அதிநவீன எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டு, இந்த எலக்ட்ரிக் கார் நிறுவனம் துவக்கப்பட்டது. எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சாரத்தினால் இயங்கும் மின்சார கார்களை டெஸ்லா நிறுவனம் வடிவமைத்து விற்பனை செய்துவருகிறது.


ரூ.7 கோடி பரிசு 
தற்போது டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல் 3 ஆம் காரின் பாதுகாப்பு மென்பொருளை ஹேக் செய்பவருக்கு ரூ.7 கோடி பரிசும் மற்றும் மென்பொருளில் உள்ள முதல் பக் கண்டுபிடிக்கும் மென்பொருள் பொறியாளருக்கு டெஸ்லா காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது என டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Pwn2Own ஹேக்கிங் 
போட்டி Pwn2Own என்ற கம்ப்யூட்டர் ஹேக்கிங் நிகழ்ச்சி கான்செக் மேற்கு பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மென்பொருள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள பிழைகளை கண்டறிய வாய்ப்பு தரப்படும். தவறுகளைச் சரியாக சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு பணம் மற்றும் பொருளாக பரிசுகள் வாங்கப்பட்டுவருகிறது.




டெஸ்லா கார் 3 
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் Pwn2Own கம்ப்யூட்டர் ஹேக்கிங் போட்டியாளர்களுடன் இணைத்து, தனது காரில் உள்ள மென்பொருள் பிழை மற்றும் அதில் உள்ள பக்-களை சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு 7 கோடி பரிசு தொகை மற்றும் டெஸ்லா காரின் 3 ஆம் மாடலை பரிசாக வழங்கவுள்ளது. இச்செய்தி பல ஹேக்கர்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது. 


Tuesday, January 15, 2019

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்! Robot as traffic police.in Chennai

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. 
இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை நேற்று (ஜனவரி 14) சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.
சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.

Thursday, December 06, 2018

வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டா தரும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்



இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஜிசாட் -11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்திப்பதன் காரணமாக அதன் சேவையை மேம்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்வதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் விநாடிக்கு 100 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வது என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்காக உள்ளது.


இதனை எட்டிப்பிடிக்கும் முயற்சியின் முதல்படியாக தற்போது ஜிசாட் 11 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வதற்கு தேவையான வேலைகளை செய்யும்.
இந்த செயற்கைகோளை தென் அமெரிக்காவில் உள்ள ஃப்ரென்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:07 -க்கு விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட 33-வது நிமிடத்தில் செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது-
இஸ்ரோ அனுப்பியிருக்கும் செயற்கைகோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


சுமார் 5,854 எடையை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளது. அதேநேரம் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயற்கைகோள்களில் இதுதான் அதிக சக்தி கொண்டது. இந்தியாவின் மிகப்பெரும் சொத்தாக இது கருதப்படும். நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் இந்த செயற்கைகோள் கண்காணித்து விடும். விநாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை இந்த செயற்கைகோள் நாட்டிற்கு அளிக்கும்.
வினாடிக்கு 100 ஜிபி டேட்டாவை அளிப்பதுதான் டிஜிட்டல் இந்தியாவின் இலக்கு. அதனை எட்டுவதற்காக ஏற்கனவே 2 செயற்கைகோள்களை அனுப்பி விட்டோம். இது 3-வது செயற்கைகோள்.
 

நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, November 02, 2018

தூய்மையை காரணம் காட்டி இந்தியாவில் பெண்கள் மொபைல் போன்களுக்கு மறுப்பு -ஆய்வு தகவல்



தூய்மையை காரணம் காட்டி இந்தியாவில் பெண்கள் மொபைல் போன்களை மறுப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது. 

 
'ஒரு கடுமையான அழைப்பு: இந்தியாவில் மொபைல் போன் வைத்திருப்பதற்கான தடைகள் மற்றும் தாக்கங்கள் குறித்த புரிந்துணர்வு' என்ற தலைப்பில்  ஹார்வர்ட் கென்னடி பள்ளி நடத்திய ஆய்வில் மொபைல் போன்களைப் பயன்படுத்த இந்திய பெண்களுக்கு  உள்ள முன்னணி தடைகளை அடையாளம் காண்பதற்காக 125 அசல் தரம் வாய்ந்த நேர்காணல்கள், இலக்கிய ஆய்வு மற்றும் இரண்டாம் தர அளவின் பகுப்பாய்வு ஆகிய இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டு உள்ளது . இது இந்த தடைகளின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்கிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

கூறப்படுவதாவது:-

பாலின சமத்துவமின்மை இந்திய சமுதாயத்துக்கு புதியது அல்ல, ஆனால் தொழில்நுட்ப ரீதியாகவும்  உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மொபைல் போன்களை அணுகுவதில்  பெண்களுக்கும் ஆண்களுக்கும்  இடையே 33 சதவீத இடைவெளி உள்ளது. இது பெண்களை சம்பாதிக்கவும்  மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை அணுகுவதோடு, தகவலை தெரிந்துகொள்ளவும்  வைத்து உள்ளது.


இந்தியாவில் 71 சதவிகித இந்தியர்கள் மொபைல் போன்களை வைத்திருந்தாலும், 38 சதவீத பெண்கள் மட்டுமே  மொபைல் போன் வைத்திருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள், என அறிக்கை கூறுகிறது.இந்த இடைவெளியைப் பொறுத்தவரையில் முதன்மை காரணம் என்னவென்றால், இது "பாரம்பரிய பாலின நெறிமுறைகளை சவால் விடுக்கிறது.


விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மொபைல் போன்களைக் கொடுக்கவில்லை அல்லது சாதனத்தை உபயோகிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஏனெனில் இது திருமணத்திற்கு முன் அவர்களின் "தூய்மை"( நெறி) பற்றிய கேள்விகளைத் தூண்டலாம் மற்றும் அவை டிஜிட்டல் துன்புறுத்துதலுக்கு உட்படுத்தப்படலாம், இது பரவலாக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.  ஏனெனில் இது திருமணத்திற்கு முன் அவர்களின் "தூய்மை" பற்றிய கேள்விகளைத் தூண்டலாம் மற்றும் அவை டிஜிட்டல் துன்புறுத்துதலுக்கு உட்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது. இது பரவலாக ஊடகங்களில் பதிவாகியுள்ளது.

இது திருமணமான பெண்களுக்கு என வரும் போது, அறிக்கையில் ஒரு பெண்ணின் முதன்மை பொறுப்பு அவளது குடும்பம் மற்றும் குடும்பத்தை கவனித்துக்கொள்வதே என்று நெறிமுறைகள் கூறுகின்றன.
 வீட்டை கவனிப்பதற்கு  மையப்படுத்தப்பட்ட பெண்கள்  சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் உற்பத்தி நோக்கங்களுக்காக போனைப் பயன்படுத்த சில வாய்ப்புகளை  மட்டும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 


மொபைல் இடைவெளி என்பது இந்திய சமுதாயம் முழுவதும் உள்ளது. வயது வரம்பு, குடியிருப்பு நிலை, திருமண நிலை, கல்வித்தகுதி , நகர்ப்புறம் மற்றும் வறுமை நிலை ஆகியவை அடங்கும். இடைவெளியில் கணிசமான மாறுபாடு இருப்பினும், இது எப்போதும் 10 சதவிகித புள்ளிகள் அல்லது அதிகமானது, "


ஆய்வாளர்கள், பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை தடைகளின் இயல்பு மற்றும் வலிமையின் தன்மை மற்றும் வலிமை பற்றிய இந்த ஆதாரங்களை வழங்கும்போது இந்திய பெண்கள் எதிர்கொள்ளும் வகையில், தொலைபேசிகளைக் குறைப்பதற்காக அல்லது அவர்களது பயன்பாட்டிற்கு சுற்றியுள்ள  சூழ்நிலைகளை  மாற்றுவதற்கான கொள்கைகளை வடிவமைக்க பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?




நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட் ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பலவகையான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். 



அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் 'என்னவெல்லாம்' செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!



#1 திறந்தவெளி வைபை : 
பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
#2 சேர்ச் ஹிஸ்ட்ரி :
 ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.




இந்தியா : 
 கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



#3 போஸ்ட் அல்லது ட்வீட் : 
மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.


#4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் : 
வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



#5 வீடியோவில் நடனம் :
 ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.


ரஷ்யா : 
 ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts