வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

ஆன்-லைனில் முன்பதிவு செய்தவருக்கு செல்போனுக்கு பதிலாக செங்கல் வந்ததால் அதிர்ச்சி போலீசார் விசாரணை



அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத் என்பவர் செல்போன் வாங்குவதற்காக பிரபலமான ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ந் தேதி முன்பதிவு செய்தார். 


அவுரங்காபாத்தை சேர்ந்த கஜானன் காரத் என்பவர் செல்போன் வாங்குவதற்காக பிரபலமான ஆன்-லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ந் தேதி முன்பதிவு செய்தார். இதற்கான தொகை ரூ.9,134-ம் ஆன்-லைன் மூலமாகவே செலுத்தினார். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

அந்த ஆன்-லைன் நிறுவனத்திடம் இருந்து கஜானன் காரத்துக்கு கடந்த 14-ந் தேதி ‘பார்சல்’ ஒன்று வந்தது. அதை திறந்து பார்த்தபோது அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அதற்குள் செல்போனுக்கு பதிலாக செங்கல் துண்டு ஒன்று இருந்தது.


உடனே அவர், தனக்கு ‘பார்சல்’ கொண்டு வந்த கூரியர் நிறுவனத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார். ஆனால் பார்சல் வினியோகிக்கும் பொறுப்பு மட்டுமே தங்களுக்கு உரியது எனவும், அதில் இருக்கும் பொருட்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர்கள் கூறிவிட்டனர்.


இதைத்தொடர்ந்து கஜானன் காரத் தற்போது போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்-லைன் மூலம் செல்போன் முன்பதிவு செய்தவருக்கு செங்கல் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அவுரங்காபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment