வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம்: விஷால்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 07, 2018

நான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம்: விஷால்



தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று (அக்டோபர் 4) ரிலீஸாகியிருக்கும் படம் ‘96’. த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். தேவதர்ஷினி, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தைத் தயாரித்த இவர், ‘துப்பறிவாளன்’ படத்தை வாங்கி வெளியிட்டார். அந்த நட்பு அடிப்படையில், ஒன்றரை கோடி ரூபாயை பைனான்ஸுக்கு வாங்கி நந்தகோபாலுக்குக் கொடுத்துள்ளார் விஷால்.


அந்தத் தொகையை, ‘96’ படத்தின் ரிலீஸின்போது தருவதாக நந்தகோபால் கூறியதால், தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் விஷால். அது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று காலை வரை நீண்டுகொண்டு போகவே, படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதி தலையிட்டு, அந்தப் பணத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்மூலம் பிரச்சினை முடிவுக்கு வர, நேற்று ‘96’ படம் ரிலீஸானது. இந்நிலையில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதியும் சுமக்க வேண்டாம் என விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் தரப்பிடம் விசாரித்த போது, ''விஷால் தொடர்ந்து பைனான்ஸ் ரீதியாக பல வலிகளைச் சந்தித்து வருகிறார். அந்தமாதிரி ஒரு வலியை  விஜய் சேதுபதிக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நேற்று இரவு முழுக்க அவர் உறங்கவும் இல்லை. ஆகவே, விஜய் சேதுபதி கொடுப்பதாகக் கூறியுள்ள ரூ.1.50 கோடி தொகையைத் தர வேண்டாம். அதற்கான பொறுப்பை மீண்டும் விஷாலே ஏற்றுக்கொள்கிறார்.

நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.1.50 கோடி தொகையை விஷால், நந்தகோபால் அவரிடமே பெற்றுக்கொள்கிறார். அதுவரைக்கும் அந்தத் தொகைக்கு விஷால் வட்டியும் கட்டுவார். ஆகவே,  பைனான்ஸ் விஷயத்தில் தான் சுமக்கும் வலியை விஜய் சேதுபதி சுமக்க வேண்டாம் என்று விஷால் நினைக்கிறார். மேலும், இந்தப் பிரச்சினையிலிருந்து விஜய் சேதுபதி எந்த வலியும் இல்லாமல் வெளியே  வர வேண்டும். பொருளாதார ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தற்போது வெளியாகியுள்ள அவரது படம் வெற்றியடைய வாழ்த்துகளையும் விஷால் தெரிவித்தார்'' என்றனர்.


Popular Posts


No comments:

Post a Comment