வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சென்னை புறநகர் பஸ் நிலையத்தில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 08, 2018

சென்னை புறநகர் பஸ் நிலையத்தில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!



சென்னை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் கழிப்பறையில் இளம் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஆந்திரா மாநிலம் நெல்லூர், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கீதா மாதுரி ( 20 ) இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கீதா மாதுரிக்கு உடல் நிலை சரியில்லாததால் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

சிகிச்சை முடிந்து உடல் நிலை சரியானதால் மருத்துவமனையில் இருந்து கீதா மாதுரியை, அவரின பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா செல்வதற்கு குடும்பத்துடன் மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை நேரத்தில் வந்துள்ளனர். 
 
கீதாமாதுரி. பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் தங்களது மகள் வெளியே வரவில்லை என பெற்றோர்கள் பேருந்து நிலையம் முழுவதும் தேடி வந்த நிலையில், கீதா கையில் பிளேடால் அறுத்து கொண்டு கழிப்பறை முன்பு மயக்கமுடைந்த நிலையில் இருந்துள்ளார். கீதா மாதுரி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அலறியடித்து, உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இத்தகவல் மாதவரம் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment