வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 25, 2018

கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த போது மாரடைப்பில் மைதானத்தில் சுருண்டு விழுந்து மும்பை கிரிக்கெட் வீரர் பலியானார்.



மத்திய மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில்  டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள்  நடைபெற்று வந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
கடந்த 23-ந்தேதி 2 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டு  இருந்தது. அப்போது வைபவ் கேஸ்கர் (வயது 24) என்பவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். 

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 
மும்பை கிரிக்கெட் வட்டாரங்களில் உள்ள சிறந்த  வீரராக அறியப்பட்டவர் கேஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment