வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-12-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 10, 2018

காதலன் வீட்டில் 3 நாள் தங்கிய காதலி.. திடீரென தூக்கில் தொங்கினார்..



பெற்றோரை ஏமாற்றிவிட்டு காதலன் வீட்டுக்கு சென்ற இளம்பெண்ணின் வாழ்வு மிகவும் மோசமாக முடிந்திருக்கிறது. வால்பாறையை சேர்ந்தவர் மஞ்சுளா. திருப்பூரில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.


 
உடன் வேலை பார்த்து வந்த கார்த்தி மீது மஞ்சுளாவுக்கு லவ் வந்துவிட்டது. கார்த்தியும் மஞ்சுளாவை விரும்ப, ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக காதலித்தார்கள். இந்த லவ் மேட்டர் மஞ்சுளா வீட்டுக்கு தெரிந்துள்ளது. இதனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
காதலன் வீடு  
இந்நிலையில், தனது அம்மா வசந்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு மஞ்சுளா ஊருக்கு கிளம்பி போனார். அம்மாவையும் நேரில் பார்த்து விசாரித்தார். பிறகு வேலைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு, அங்கு போகாமல், நேராக திருப்பூரில் உள்ள கார்த்தி வீட்டுக்கு மஞ்சுளா வந்திருக்கிறார்.


தூக்கில் தொங்கினார்  
3 நாட்கள் கார்த்தி வீட்டில்தான் மஞ்சுளா தங்கியிருந்து இருக்கிறார். இந்நிலையில், மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மரணத்தில் மர்மம்  
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக உடனடியாக மஞ்சுளா பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மஞ்சுளாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தார்கள்.


தடயங்கள் இல்லை 
இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மஞ்சுளா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என இதுவரை தெரியவில்லை. மற்றொரு புறம், மஞ்சுளா தூக்கில் தொங்கியதற்கான தடயங்களும் இல்லை. எனவே காதலன் கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெற்றோர் மறுப்பு  
இதனிடையே மஞ்சுளா என்ற பெண் தங்கள் வீட்டில் தங்கி இருந்ததே தங்களுக்கு தெரியாது என்று கார்த்திக்கின் பெற்றோர் சொன்னதை கேட்டு போலீசாருக்கு இன்னும் தலையே சுற்றிவிட்டது. அதனால் 3 நாட்கள் மஞ்சுளா கார்த்தி வீட்டில் தங்கியிருக்க காரணம் என்ன? அங்கு என்ன நடந்தது? எதற்காக இந்த தற்கொலை? என்பது உட்பட பல்வேறு விஷயங்களில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

18 வயது மகளை சீரழித்த மிருகம்.. போலீஸுக்கு போன தாய்..






18 வயசு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார் பெற்ற தகப்பன். அவர் பெயர் காந்தி. கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையை சேர்ந்தவர் காந்தி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

 
எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பாராம் காந்தி. மனைவிதான் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். காந்திக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. மேலும் மனைவி வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், தனியாக இருக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லையை அளித்து இருக்கிறார். மகளுக்கு இப்போது 18 வயதாகிறது. கடந்த 5 வருடமாகவே இப்படித்தான் மகளை சீரழித்து இருக்கிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அழுது தவித்த மகள் 
ஒவ்வொரு முறையும் இப்படி மகளை நாசம் செய்துவிட்டு, இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று மகளை மிரட்டி உள்ளார். இதனால் மகளும் தந்தைக்கு பயந்து போய் வீட்டில் யாரிடமும் சொல்லாமலேயே அழுது தவித்து வந்துள்ளார்.


அதிர்ச்சியான மனைவி 
ஆனால் தினமும் தொல்லை என்பது பெற்ற தகப்பனிடம் அதிகரிக்கவும், மகளால் ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியவில்லை. அதனால் அம்மாவிடம் சென்று 5 வருஷங்களாக நடந்த சம்பவத்தை சொல்லி விட்டார். இதனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை கண்டித்தார்.

மகளிர் போலீசில் புகார் 
மகளிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் காந்தி, மகள், மனைவியை சேர்த்து மிரட்ட ஆரம்பித்தார். தன்னை இவ்வளவு நாள் சீரழித்து, மிரட்டி வந்த தந்தை, இப்போது அம்மாவையும் மிரட்ட தொடங்கி விட்டதால், நேராக மாமல்லபுரம் மகளிர் போலீசுக்கு சென்று விட்டார்.


பாய்ந்தது போக்சோ 
அங்கு 5 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார். இதையடுத்து போலீசார் காந்தியை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். பெற்ற மகளுக்கே 5 வருடங்களாக தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சாதி ஒழிப்பை நாடும் பா. ரஞ்சித் படத்தில் சாதி வெறியர்களை விளாசிய ரித்விகா



பா. ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா நடிக்கிறார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. 


மகத், யாஷிகா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா தத்தாவும் பிசியாகிவிட்டார். இந்நிலையில் பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவுக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ரித்விகா 
பா. ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தில் ரித்விகா நடிக்கிறார். இந்த படத்தில் அனேகா, ரித்விகா என்று இரண்டு ஹீரோயின்கள். அதியன் ஆதிரை இயக்கத்தில் நான் நடிப்பது குறித்து ரித்விகா ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


சாதி ஒழிப்பு  
சாதி ஒழிப்பு தான் என் கனவு என்று கூறி வரும் பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்கிறார் ரித்விகா. அண்மையில் தன் சாதியை கூகுளில் தேடியவர்களுக்கு லெப்ட் அன்ட் ரைட் விட்டார் ரித்விகா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா  
பிக் பாஸ் 2 வீட்டில் என்ன தான் சண்டை போட்டிருந்தாலும் ரித்விகாவுக்கு கிடைத்துள்ள பட வாய்ப்பு குறித்து அறிந்து ஐஸ்வர்யா தத்தா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


விஜயலட்சுமி 
ரித்விகா ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளதை அறிந்து பிக் பாஸ் பிரபலங்கள் மகத், விஜயலட்சுமி உள்ளிட்டோர் அவரை வாழ்த்தியுள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்



தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற ஹெல்ப்லைன் எண் வசதி மற்றும் அதற்கான கால் சென்டரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


 

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது. பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
பெண்கள் பாதுகாப்புக்கான ஹெல்ப்லைன் மையத்தை நிர்வகிக்க 5 வக்கீல்கள், 5 மனநல ஆலோசகர்கள் மற்றும் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட உள்ளது.

குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம்.


இந்த எண்ணில் தெரிவிக்கப்படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.  

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பொண்ணு வீடு திமுக.. .மாப்பிள்ளை வீடு அதிமுக.. மாப்பிள்ளைக்கு வந்துச்சே கோபம்!



பேனர் வெச்சதால ஒரு கல்யாணமே நின்னு போயிடுச்சு... அது என்ன பேனர் தெரியுமா? ஆரணி அருகே ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் தீவிர திமுக பிரமுகர்.


 

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர். இவரது மகள் சந்தியா. இவருக்கும் சண்முகம் என்பவருக்கும் பெரியவர்கள் கல்யாண நிச்சயம் செய்தார்கள். எல்லாமே நல்ல பொருத்தமாகத்தான் இருந்தது. ஒன்னே ஒன்றை தவிர. மாப்பிள்ளை வீட்டார் அதிமுககாரர்களாம்!! இருந்தாலும் இதை ஒரு விஷயமா எடுத்துக் கொள்ளாமல் கல்யாண வேலை தடபுடலாக நடந்தது. நேத்து காலைலதான் முகூர்த்தம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

கட்சி கொடி 

நேற்று முன்தினம் இரவு மணமக்கள் அழைப்பு நடந்து, அதில் ஊரே வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு போனது. நேற்று காலைல கல்யாணம் என்பதால் மணமக்களை வாழ்த்தி பல பேனர்கள் மண்டபம் அருகில் வைக்கப்பட்டன. அதில் திமுக பேனரும் வைக்கப்பட்டது. வெறும் பேனர் மட்டும் இல்லாமல், கட்சி கொடியும் கட்டப்பட்டது.


திமுக பேனர்

இந்த கட்சி பேனரை மாப்பிள்ளை பார்த்துவிட்டார். அது எப்படி திமுக கொடி கட்டி பேனர் வைக்கலாம் என்று பெண் வீட்டாரிடம் சண்டைக்கு போய்விட்டார். பெண் வீட்டார் ஏதேதோ காரணங்களை சொன்னாலும், "கல்யாண செலவு எங்களுடையது. அப்படி இருக்கும்போது நீங்க எப்படி திமுக பேனரை எங்களை கேட்காமல் வைக்கலாம்" என்று வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் தகராறாக மாறி, தகராறு மோதலாக மாறி, மோதல், கைகலப்பாக முடிந்தது

மாப்பிள்ளை வேண்டாம் 

இது எல்லாத்தையும் ஷாக்குடன் பார்த்து கொண்டிருந்த மணப்பெண் சந்தியா, "கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளை இவ்ளோ பிரச்சனை பண்றாரே, தாலியை கட்டிட்டா இன்னும் எவ்வளவு பிரச்சனை பண்ணுவார்?? என பயந்தபடியே கேட்டார். அதோடு இந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம் என்றும் எல்லோர் முன்னாடியும் போட்டு உடைத்தார்.


வெளியேறினார்  

சந்தியா இப்படி சொல்வார் என மாப்பிள்ளை எதிர்பார்க்கவே இல்லை. அதனால் அவமானம் தாங்காமல் மாப்பிள்ளை கோபித்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறி போனார். அவர் பின்னாடியே அவர் வீட்டு ஆட்களும் சென்றார்கள். இதனால் நடக்க இருந்த கல்யாணம் நின்றுவிட்டது.

தங்கை மகன் ஏழுமலை 

கல்யாண பெண் இப்படி சொல்லவும், அவரது பெற்றோரும் இதை எதிர்பார்க்கவில்லைதான். இதனால் சந்தியாவின் அப்பா எப்படியாவது மகளின் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கல்யாணத்துக்கு வந்திருந்த தனது தங்கை மகன் ஏழுமலையிடம் சென்று, மகளை கல்யாணம் செய்துக்க சம்மதமா என்று கேட்க, அவரும் சம்மதம் சொன்னார்.


திடீர் மாப்பிள்ளை 

இதையடுத்து, சந்தியாவுக்கும், திடீர் மாப்பிள்ளை ஏழுமலைக்கும் அருகில் இருந்த கோவிலில் கல்யாணம் நடந்தது. இந்த பழைய மாப்பிள்ளை சண்முகத்துக்கு தெரியவந்ததும், நேராக ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எது எதுக்கோ கல்யாணம் கடைசி நேரத்துல நின்னு போயிருக்கு. ஆனா இப்படி பேனர் வெச்சதால நின்னுபோனது பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts