வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-05-12
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 19, 2019

தலைகீழாக கையெழுத்திட்ட சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி - முதல் கோணல் முற்றிலும் கோணல்


தமிழகத்தில் 4 தொகுதிகளில் இன்று (19/05/2019) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி  வாக்குப்பதிவு செய்யும் போது தனது கையொப்பத்தினை தலைகீழாக போடும் காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 
ஒரு நோட்டு நேராக உள்ளதா என்பதையே தெரியாமல் கையொப்பமிடும் இவர் பொதுமக்களின் பிரச்சனைகளில் எப்படிப்பட்ட கையெழுத்திடுவார் என நீங்களே யோசியுங்கள் மக்களே. வேட்பாளர்களுக்கு என ஒருசிறப்பான தகுதியினை மாற்றும் வரை இந்த நிலை தான் தொடரும். புகைப்படங்கள் கீழே...






http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Friday, May 17, 2019

ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்!

திண்டிவனம் அருகே ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் கூலிப்படையை வைத்து மூத்த மகனே குடும்பத்தை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் 60 வயதான ராஜி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். கோவர்த்தனனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரத்தக்கறை 
14ம் தேதி இரவு கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலையில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததால் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது. ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது.


மூத்த மகன் 
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாததால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து இருக்கலாம் என்று கூறினார்.


கிடுக்கிப்பிடி விசாரணை  
ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்த அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவர்த்தனனை கைது செய்த போலீசார் தனி அறையில் வைத்து நேற்று இரவு முதல் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


செல்போன் ஆய்வு  
மேலும் கோவர்த்தன் மற்றும் அவரது மனைவி தீபாகாயத்ரியிடம் செல்போனில் பேசியவர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அதுமட்டுமல்லாது, கொலை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
குடும்பத்தை தீர்த்துக்கட்டிய மகன் 
விசாரணையில் 3 பேர் உயிரிழந்தது, திட்டமிடப்பட்ட கொலையே என முதலில் போலீசார் உறுதிபடுத்தினர். இந்நிலையில் மூத்த மகனே சொத்துக்காக கூலிப்படையை வரவழைத்து தாய், தந்தை மற்றும் தம்பியை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கூட பாஸ் ஆகல... அதிர்ச்சியில் அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

நடப்பாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்நிலையில், மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.




பொறியியல் கல்லூரிகள் 

நாடு முழுவதும் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைக் கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அதன்படி, 2019-20 -ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 பொறியியல் கல்லூரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பூர்த்தி செய்யாத கல்லூரிகள் 

பொறியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டே அனுமதி வழங்கப்படும். அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத தமிழகத்தில் செயல்பட்டு வரும் 250 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை சார்பில் அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டது.


கண்டுகொள்ளாத கல்லூரிகள் 

நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்த மேலும் 158 பொறியியல் கல்லூரிகளின் 421 இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 92 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய கால அவகாசத்துக்குள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமலும், உரிய விளக்கமும் அளிக்காமலிருந்துள்ளது.


மாணவர் சேர்க்கை குறைப்பு:

அவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளத




முழுத் தடை மேலும்

 குறிப்பிட்ட 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.இ, பி.டெக் கலந்தாய்வு
 இதனிடையே, 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான பிஇ, பி.டெக் பொறியியல் படிப்புக்கு மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 2 ஆம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


முதல் மூன்று இடங்கள் 

 2018 ஆம் ஆண்டு கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, கோவை பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள◌ை


ஒருவர் கூட தேர்ச்சி இல்லை 

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித பட்டியலில் தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதில் குறிப்பிட்ட 6 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது அண்ணா பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 74 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்க விகிதத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தரமான கல்லூரிகள்?

 கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 150 கல்லூரிகள் 50 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், நவம்பர் மாத தேர்வு முடிவுகளில் தரமான கல்லூரிகள் என சான்றளிக்கப்பட்ட 59 கல்லூரிகள் மட்டுமே 50 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளன. மிகவும் தரமான கல்லூரிகள் என வகைப்படுத்தப்பட்ட கல்லூரிகளில் 85.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி 
பெற்றுள்ளனர்.


50 சதவிகிதத்திற்கும் கீழ் 

482 பொறியியல் கல்லூரிகளில் 422 கல்லூரி மாணவர்கள் 50 சதவிகிதத்திற்கும் கீழே தேர்ச்சி பெற்றுள்ளன. 177 கல்லூரி மாணவர்களில் 50 முதல் 25 சதவீதத்திற்கும் இடைப்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


சரிவைச் சந்திக்கும் பொறியியல் துறை?

சமீப காலமாகவே தமிழகத்தில் பொறியியல் துறையின் மீது மோகம் குறைந்து கலைத் துறையின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்கட்டமைப்பு வசதிகள் அற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்து அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக அறிவித்தது. மேற்கண்ட இந்த முடிவுகளானது தமிழகத்தில் பொறியியல் கல்வியைச் சீரமைக்க வேண்டியதன் கட்டாய அவசியத்தையே விளக்குகிறது.

குழந்தையை எளிய முறையில் தூங்க வைப்பது எப்படி?


தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர்.


தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.


தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.
சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும்.

பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

* இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

* தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

* வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

* குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

* சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

* மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

* குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

* ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும். 

சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 2019, விழுப்புரத்தில் விண்ணப்பம் விநியோகம்


விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று துவங்கியது.அதன்படி, எல்.எல்.பி., 5 ஆண்டு சட்ட படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீதமும், மற்ற பிரிவினர் 70 சதவீதமும் மதிப்பெண் பெற்று இருத்தல் வேண்டும்.


விண்ணப்பம் பெற இந்தியன் வங்கி கிளைகளில், கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள், சேர்மன், லா அட்மிஷன் 2019-20, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் லா யுனிவசர்சிட்டி, பூம்பொழில், நெ.5, டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விழுப்புரத்தில் திரு.வி.க., வீதியில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. கல்லுாரியின் முதல்வர் முருகேசன், விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைத்தார்.

மனைவிக்கு 'டார்ச்சர்' கணவனுக்கு நடந்தத பாருங்க...


திருக்கோவிலுார், கீழையூர், தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 30; இவரது மனைவி தமிழ்மணி, 24; கடந்த 2011ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


சக்கரவர்த்திக்கு பூமாரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை கண்டித்த தமிழ்மணியை, சக்கரவர்த்தி அவரது தாய் கலா, அருள்ஜோதி ஆகியோர் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் சக்கரவர்த்தி உட்பட மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் முடிவு வரும் முன்பே எம்பியானார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்




தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பியாகிவிட்டார்.



குச்சனூர் ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் என்று கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரை பொறித்துள்ளனர். ஆனால், அடுத்த வரியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.



தேர்தல் முடிவே வரவில்லை. அதற்குள் இவ்வளவு அவசரமா? என சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, May 15, 2019

உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா?


உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? உடனடியாக கழிவறை அல்லது தரை என்று கூறுவீர்கள். ஆனால், இந்த விடை சரியல்ல. பாத்திரம் துலக்கும் பஞ்சு அல்லது துணிதான் உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான பொருளாகும் என அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.

பாத்திரங்களை சுத்தப்படுத்தும் துணிகள் பொதுவாக பல பாக்டீரியாக்களின் தாயகமாகி விடுகின்றன. இந்த துணிகள் வெதுவெதுப்பாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால், கிருமிகள் வளர்வதற்கு சிறந்த சூழ்நிலை அவற்றில் உள்ளதே இதற்கு காரணமாகும். கழிவறை இருக்கையில் ஒரு சதுர அங்குல (6.5 சதுர சென்டிமீட்டர்) இடத்தில் 50 பாக்டீரியாக்களே இருக்கின்றன.
ஆனால், சமையலறை பஞ்சில் ஒரு சதுர அங்குல இடத்தில் 10 மில்லியன் மற்றும் பாத்திரம் கழுவும் துணியில் ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன.


வேறு சொற்களில் கூறினால், உங்களுடைய சமையலறை பஞ்சு உங்கள் கழிவறையின் இருக்கையைவிட இரண்டு லட்சம் முறை அதிக அழுக்கானதாக இருக்கும். எனவே, உங்களுடைய பாத்திரம் கழுவும் துணிகள் அல்லது பஞ்சை நன்றாக உலரும் வகையில் வைத்து கொள்வது மிகவும் சிறந்தது. சமையலறை பஞ்சுகளை சுத்தம் செய்வது பற்றி “குட் ஹெஸ்கீப்பிங்” சஞ்சிகையும் சில குறிப்புக்களை வழங்கியுள்ளது.
இந்த பஞ்சையும், துணியையும் நுண்ணலை அடுப்பு அல்லது பாத்திரம் கழுவும் இயந்திரத்திலும் ஒட்டி வைத்து கிருமிகளை அழித்துவிடலாம்.


மேலும், இறைச்சிக்கு ஒன்றும், பிற பயன்பாட்டுக்கு வேறொன்றும் என தனித்தனியாக வைத்திருப்பதும் நன்றாக இருக்கும்.
மரத்தால் செய்யப்பட்ட வெட்டும் பலகைகள் சுத்தம் செய்வதற்கு எளிதானவை. மிக நன்றாக சுத்தம் செய்வதற்கு பாத்திரம் சுத்தம் செய்யும் வினிகரை அசிட்டிக் அமிலமாக பயன்படுத்துவது கிருமி அசுத்தத்தை போக்குவதற்கு சிறந்த வழியாகும்.

Tuesday, May 14, 2019

ஓசூர் கிராமத்தில் வீட்டு மனையை திருடி விற்ற கிராம நிர்வாக அலுவலர் - Osur Village VAO harassment



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் மேல் காலனியை சேர்ந்த உபகாரம் க/பெ சவுரியப்பன் இவர்களுக்கு 2000-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.


வீடு எதுவுமே கட்டாமல் இருந்ததால், இந்த வீட்டு மனையை எப்படியாவது நாம் பெறவேண்டும் என்ற நோக்கில் அதே ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தார். பிறகு பேசிய ஒப்பந்தப்படி ₹1,00,000/- (ஒரு லட்சம்) பெற்றுக் கொண்டு நில ஆவணத்தில் திருத்தம் செய்து (VAO) மோசடி செய்துள்ளார்.



மேலும் மோசடியை பற்றி தெரிந்த உபகாரம் கி.நி.அலுவவரிடம் கேட்ட போது நான் அப்படி ஏதும் செய்ய வில்லை என்றும் மீறி எதாவது பேசினால் உங்களை தடம் தெரியாமல் செய்து  விடுவேன் என்றும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.


ஆழ்ந்து விசாரித்த போது இதில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளரும் சேர்ந்து மோசடி செய்துள்ளார்கள். ஆகையால் இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு புகார் செய்யப்படும்.
















அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படிப்பட்டவரா...?

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காகவும், குற்றங்கள் நடைபெற்றால் விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டறிய உதவும் வகையிலும் பொதுமக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பிரதான பகுதிகளிலும், முக்கியமான சாலை சந்திப்புகளிலும் மற்றும் போக்குவரத்து நெரிசல்,பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி சிறப்பாக குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும்,
சாலை விபத்துக்களை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்பினை ஏற்படுத்தி விபத்தை தவிர்க்க உதவும் எதிரொலிப்பு விளக்குகளை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் பொருத்தி, பல்வேறு விதமான போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்ததற்காகவும் பெருமதிப்பிற்குரிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால், அச்சிறுபாக்கம் காவல் நிலையம், வட்ட ஆய்வாளர் *D.S.சரவணன்* அவர்கள் பாராட்டினை பெற்றுள்ளார்.



கண்காணிப்பு கேமிரா, சாலை விபத்துகளை குறைக்கும் சிக்னல் விளக்குகள், பொருத்தியது மட்டுமின்றி, ஆங்காங்கு விழிப்புணர்பு வாசகங்களும், தமக்கு தொந்தரவு என நினைக்காமல், பொதுமக்கள் அடிக்கடி எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய கைபேசி  எண்ணினை விளம்பரப்படுத்திதனது எண்ணினை வெளிப்படையாக ஆங்காங்கு முக்கிய இடங்களில் வைத்து   தனது சேவையினை செய்து வரும் இவரை போன்ற அலுவலர்களை     பொதுமக்களாகிய நாமும் பாராட்டி வாழ்த்துவோம்...


அவருடைய கைபேசி எண் :9443399764
இவரை போன்ற நல் மனிதர்களின் சேவை மேலும் தொடர, சிறக்க
தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும்   வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து ஊக்கமளியுங்கள்.
அவருடன் இணைந்து பணியாற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இத்தருணத்தில் நாமும் நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

இரண்டு திருமணம் செய்யாமல் ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்




கணவனை கழட்டிவிடாமல் பல ஆண்டுகளாக ஒரு கணவனோடு வாழும் நடிகைகள் யார் யார்:


1.நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மீனா இவர் ஒரு திருமணம் செய்தார். இவருடைய வித்யாசாகர் ஆவர். விவாகரத்து வாங்காமல் கணவனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது பாராட்டுதலுக்குரியத்தாகும். 

2.நடிகை ரம்யா கிருஷ்ணன்
தற்போது 48 வயதான புகழ் பெற்ற தென் இந்திய நடிகைதான் ராமயா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்த திரைப்பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்த்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

3.நடிகை ரோஜா
தென் இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிப்பலமான நடிகை தான் ரோஜா. இவர் தமிழ் திரைப்பட பிரபலமான ஆர்.கே.செல்வமணி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார்.

4.நடிகை தேவயாணி
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக திகந்தவர் தேவயாணி. பல்வேறு வெற்றி படங்களில் முன்னணி நடிகர்கர்களுடனும் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 44 வயதாகிறது. இவர் திரைப்பட இயக்குனர் ராஜா குமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

5.நடிகை சிம்ரன்
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை தான் சிம்ரன். தற்போது இவருக்கு 43 வயதாகிறது. மும்பையை சேர்ந்த நடிகையாவார். தீபக் பாக்க என்பவரைதிருமணம் செய்து கொண்டார் இவர்.