செங்கல்பட்டு மாவட்டம்,
மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.13, பஜனை கோயில்
தெரு பகுதியில் வசிக்கும் 150 நலிவடைந்த குடும்பத்தினர்களுக்கு அச்சிறுபாக்கம் பேரூராட்சி
தி.மு.க செயலாளர் எஸ்.உசேன் தலைமையில், கழக முன்னோடி ஆசிரியர்.தருமன் முன்னிலையில்
மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு
ஊரடங்கு உத்தரவினால் கடும் பாதிப்பில் உள்ள இப்பகுதி மக்களுக்கு தி.மு.க. சார்பாக அச்சிறுபாக்கம்
பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பார் டி.மோகனகிருஷ்ணன் நிவாரண பொருட்களை வழங்க
ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.
நிவாரணப் பொருட்கள்
வழங்கும் நிகழ்வை வார்டின் முக்கிய பகுதியில் துவங்கி பின்னர் பொதுமக்களுக்கு வீடு
வீடாக சென்று பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் பேரூர் இளைஞரணி
அமைப்பாளர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதி ஏ.ஆர்.ஏழுமலை, அவைத்தலைவர் சையத் முகமது,
பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.பட்டாபி, பேரூராட்சி பொருளாளர் பி.எம்.சுப்பிரமணியம்,
ஒன்றிய துணைச் செயலாளர் கோகுலம் இரமேஷ், அவைத்தலைவர் சையத் முகமது, கிளை செயலாளர் முகமது
கனி உள்ளிட்ட சில தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment