நெல்லுக்கான குறைந்தபட்ச
ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.50 என ஆண்டுதோறும் மத்திய அரசு வழக்கமாக அறிவித்து
வருகிறது.
அப்படி அறிவித்ததால்
விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என மத்திய அரசு எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில்
இந்த ஆண்டு கரீப் பருவத்தின் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.53
உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டைவிட
ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளதால் 1 கிலோ நெல்லுக்கு 3 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த
அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஊரடங்கினால் பொருளாதார ரீதியாக
அனைத்து தொழில் தொடர்பானவர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதை
மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும் என சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.
விலை உயர்வு மற்றும்
போக்குவரத்து செலவுகள் உயர்வுகள் காரணமாக விவசாய உற்பத்தி செலவுகள் மற்றும் இடுபொருள்
செலவுகள் அதிகமாகியுள்ள இந்த தருணத்தில் கிலோவுக்கு 3 பைசா மட்டுமே அரசு உயர்த்தியுள்ளதை
விவசாயிகள் வேதனையோடு காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அனைத்து
விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் எம்.வெங்கடேசன் 02.06.2020 அன்று வெளியிட்ட பத்திரிக்கை
செய்தியில் “விவசாயிகளுக்கு அதிகபட்ச விலையாக ரூ.2500 உயர்த்தி மத்திய மாநில அரசுகள்
அறிவிக்கை வெளியிட வேண்டுமென தெரிவித்ததோடு மத்திய அரசுக்கு விவசாயிகள் சார்பாக கண்டனத்தையும்
தெரிவித்தார்”.
No comments:
Post a Comment