வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை- ஓ. பன்னீர் செல்வம்



தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.


ராயப்பேட்டையில்  உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்  உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும் போது சோதனைகளை தாங்கி அதிமுகவை காப்பாற்றியவர் ஜெயலலிதா. தற்போது   தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது. அ. தி.மு.கவில் சசிகலா உறுப்பினர் கிடையாது. அதிமுகவில் நடப்பாண்டில் 60 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர் என கூறினார்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும் போது  துன்பத்தையும், இடர்பாடுகளையும் தாங்கி கொண்டு அதிமுகவை கட்டி காப்பாற்றியவர் ஜெயலலிதா. வெளிநாடுகளிலும் அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா.சதிகாரர்களின் திட்டங்களை முறியடித்து ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை தன்னை அர்ப்பணித்து காத்தவர் ஜெயலலிதா என கூறினார்

பின்னர்  பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.  தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார், அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறினார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment