வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் அம்சங்கள் - இரும்பு மனிதருக்கு உலகின் மிக உயர்ந்த சிலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 31, 2018

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் அம்சங்கள் - இரும்பு மனிதருக்கு உலகின் மிக உயர்ந்த சிலை



இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சுதந்தரமடைந்த இந்தியாவுடன், பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் என பெயர் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் பிஸ்மார்க் என அழைக்கப்பட்ட வல்லபாய் படேலுக்கு மிக உயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

   
நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலையை விடவும் உயரம் கொண்டது. குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, 2013-ம் ஆண்டு இந்த சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி முடிந்து இன்று திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி இதனை திறந்து வைத்தார்.


இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து இரும்பு, மண், தண்ணீர் சேகரிக்கப்பட்டது. 3 லட்சம் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சுமார் 700 டன்கள் இரும்பு நாடுமுழுவதும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் இந்த சிலையைச் சுற்றி 20,000 சதுர மீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணிகள் முடிந்து நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதியான இன்று பிரதமர் மோடி இந்த சிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் பல மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.


அதேசமயம் இந்த சர்தார் வல்லபாய் சிலையை பிரதமர் மோடி தனது அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வல்லபாய் சிலையை பாஜகவும், பிரதமர் மோடியும் பயன்படுத்தி வருவதாக அக்கட்சி கூறியுள்ளது.


2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூறும்............


இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல. 


பட்டேல் அருங்காட்சியகம்.


மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.


3D projector


சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை லிஃட்டில் மேலே சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன்  கண்டு மகிழும் வசதி.


சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.


அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம். அவர்களின் உற்பத்தி சந்தை.


மலர் கண்காட்சியகம்.


எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.


இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.


எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.

மேலும் இந்த சிலை அமைப்பதற்கு பாஜக சார்பில் இந்தியா முழுவதும் விவசாயிகள் பயன்படுத்தும் மண்வெட்டி, கலைக்கொத்தி, அரிவால், ஏர்கலப்பை என 135 டன் உலோகங்கள் சேகரித்து அனுப்பப்பட்டது. 


எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.


இப்படி ஒப்பாரி வைக்கும் பல முட்டாள்கள் தான் 

அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது 


அங்குள்ள சுதந்திர தேவி சிலை முன் நின்று போட்டோ 

எடுத்து முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.


சீனா அத பண்றான்,அமெரிக்கா இத பண்றான் என்று வாயை பிளக்க வேண்டியது..இந்தியா ஏதாவது செய்தால் இது தேவையற்றது,வீண் செலவு என்று வாய்ச்சவுடால் பேசுவது.ராக்கெட் அனுப்புனா சில கூமுட்டைகள் ஒப்பாரி வைக்கும்,ஆனால் mobile use பண்ண முண்டி அடிச்சுக்கிட்டு வரும்..


பாரிசில் உள்ள எபில் towerஐ வாய்ப்பிளந்து என்னே அருமை என்று பாப்பாங்க, சீனாவுல கடலுக்கு நடுவுல பாலம் கட்டுனா wow சூப்பர் ன்னு சொல்லுவாங்க,அரபு நாட்டுல இருக்கு புஜ்ஜு கலீபா என்ற உயரமான கட்டிடத்தை வாய்ப்பிளந்து பாப்பாங்க ஆனால் இந்தியாவில் இருக்கும் உயரமான பட்டேலின் சிலையை waste என்று கூறும் முட்டாள்ளை என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை 


இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது ?


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment