வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காஞ்சீபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

காஞ்சீபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழப்பு



காஞ்சீபுரத்தில் நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சீபுரத்தில் நாகலு தெருவில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கு பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளது. 
 
தீ விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே நாட்டு வெடிகள் தாயாரிக்கப்பட்ட போது வெடிவிபத்து நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடு பலத்த சேதம் அடைந்துள்ளது. அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

வெடிகள் வெடித்து சிதறியபோது அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். அனுமதியில்லாமல் இதுபோன்று பலர் தீபாவளி சீட்டு நடத்தி வெடிகளையும் வாங்கி குவிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment