வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பயமுறுத்தும் கஜா.. மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அரசு அறிவுறுத்தல்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 11, 2018

பயமுறுத்தும் கஜா.. மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அரசு அறிவுறுத்தல்!



கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. 

கஜா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வரும் 14ம் தேதி மாலையில் இருந்து 16ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல் உள்ளது. 110 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் சென்னையை கடக்க வாய்ப்புள்ளது. 
 
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கனமழையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மீட்பு சாதனங்கள், பொருட்கள், மருந்து பொருட்களை தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment