வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவியுடன் சண்டை.. தூக்கில் தொங்கினார் கூலி தொழிலாளி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 19, 2018

மனைவியுடன் சண்டை.. தூக்கில் தொங்கினார் கூலி தொழிலாளி



மனைவியிடம் பிரச்சனை ஏற்பட்டதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை எர்ணாவூர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர். 45 வயதாகும் சங்கர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.


ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி, தகராறு இருந்து வந்திருக்கிறது. இதனால் நான்கு வருஷங்களுக்கு முன்னாடியே சண்டை போட்டுக் கொண்டு தனியாக வந்துவிட்டார். கணவனும் மனைவியும் தனித்தனியாகத்தான் வாழ்ந்து வந்தனர்.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சங்கர் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. விரக்தியின் உச்சத்துக்கு போய்விட்ட சங்கர் 2 நாளுக்கு முன்னாடியே தன் வீட்டில் தூக்குப்போட்டு உயிரிழந்துள்ளார். ஆனால் இந்த விஷயம் வேறு யாருக்குமே தெரியவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
2 நாளாக வீடு திறக்காமல் இருக்க அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. அதனால் கதவை தட்டலாம் என்று வீட்டுக்கு வந்தால், குப்பென்று நாற்றம் எடுத்தது. அதனால் உடனடியாக எண்ணூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த போலீசார், சங்கரின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமான விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment