செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் உத்தரவிற்கிணங்க செங்கை மாவட்ட
செயலாளர் சூ.க.ஆதவன்
தலைமையில் ஆதரவற்ற விதவை
பெண்கள் 60 நபர்களுக்கு 5 கிலோ
அரிசியும், இருளர்
பழங்குடியினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 200 நபர்களுக்கு மதியம்
உணவும் 11.05.2020
அன்று வழங்கப்பட்டது.
வெள்ளப்புத்தூர் முன்னாள்
ஊராட்சிமன்றத் தலைவர் ப.விஜயகுமார் ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய
செயலாளர் ஏ.கே.தயாநிதி, தமிழினி, அதே சேகர், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் முகிலன், தனுபார்த்தசாரதி, மங்களம் வாசுதேவன், சித்தாமூர் விஜி,
தம்பிவளவன் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment