செங்கல்பட்டு மாவட்டம்,
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, கடம்பாடி உள்ளிட்ட 5-ற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும்
ஏழை எளிய, தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் என அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.
ஏ.ஆர்.டி.எஸ்.
சோஷியல் எகனாமிக் டேவலப்மெண்ட் ட்ரஸ்ட் சார்பில் ஏ.ஆர்.தர்மலிங்கம் மற்றும் சங்குபதி
ஆகியோரின் ஏற்பாட்டில் 5000 குடும்பத்தாருக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள்
அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஏ.ஆர்.தர்மலிங்கம் வழங்கினார். இந்த
நிகழ்வில் மாமல்லபுரம் முன்னாள் சேர்மன் எஸ்வந்த்ராவ், சமூக ஆர்வலர்கள் குமார், வீரராகவன்,
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment